வால்பாறையில் யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழப்பு

அசலா, ஹேமா ஸ்ரீ
அசலா, ஹேமா ஸ்ரீ
Updated on
1 min read

வால்பாறை: பொள்​ளாச்சி அடுத்த வால்​பாறை சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்​களாக கரடி, யானை உள்​ளிட்ட வனவிலங்​கு​கள் வனப்​பகு​தியை விட்டு வெளி​யேறி குடி​யிருப்பு பகு​தி​யில் உலா வரு​வது அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக வீடு​கள் மற்​றும் ரேஷன் கடைகளை உடைத்து அங்​குள்ள பொருட்​களை சேதப்​படுத்தி செல்​வது தொடர்​கதை​யாக உள்​ளது.

இந்​நிலை​யில் நேற்று அதி​காலை வாட்​டர் பால்ஸ் எஸ்​டேட் அருகே ஊமை​யாண்டி முடக்கு பகு​தி​யில் வனப்​பகு​தியை விட்டு
வெளி​யேறிய யானை கூட்​டம், அங்​குள்ள குடி​யிருப்​புக்​குள் நுழைந்​தது. மாரி​முத்து என்​பவரின் வீட்​டின் ஜன்​னல், கதவு​களை இடித்த நிலை​யில், உள்ளே இருந்த அவரது தாய் அசலா என்​கிற அஞ்​சலை (57) மற்​றும் 3 வயது மகள் ஹேமாஸ்ரீ ஆகிய இரு​வரை​யும் காட்டு யானை தாக்​கி​யுள்​ளது. இதில் ஹேமாஸ்ரீ சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

படு​காயமடைந்த நிலை​யில் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்த அசலா​வை, அரு​கில் இருந்​தவர் மீட்டு வால்​பாறை அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அசலா உயி​ரிழந்​தார். தகவல் அறிந்து வந்த வால்​பாறை வனத்​துறை​யினர், உடல்​களை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக வால்​பாறை அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். பின்​னர், குடி​யிருப்​புக்கு மத்​தி​யில் இருந்த யானை​களை வனப்​பகு​தி​யில் விரட்​டும் பணி​கள் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில் குடி​யிருப்​புக்​குள் நுழை​யும் காட்டு யானை​களை அடர்ந்த வனப் பகு​திக்​குள் விரட்ட வலி​யுறுத்தி பொது​மக்​கள் ஆழி​யாறு - வால்​பாறை சாலை​யில், மறியலில் ஈடு​பட்​டனர்.

இதனால் அப்​பகு​தி​யில் சிறிது நேரம் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த போலீ​ஸார் மற்​றும் அதி​காரி​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களு​டன் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டனர். யானை​களை விரட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​ததையடுத்து பொது​மக்​கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in