பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள மின்வாரிய தலை​மையகத்​தில் மின்வாரிய கழகங்​களுக்​கிடையி​லான உயர்​மட்ட ஒருங்​கிணைப்​புக் குழு கூட்​டம் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றத்​து.

இந்த கூட்​டத்​தில் பேரிடர் மேலாண்மை மற்​றும் பருவ மழைக்​கால முன்​னேற்​பாடு​கள், பணி​யாளர் தேவை மற்​றும் மனிதவள செயல்​முறை​கள், சட்ட விவ​காரங்​கள், நுகர்​வோர் சேவை மற்​றும் குறைதீர் வழி​முறை​கள், அறி​விப்​பு​கள், திட்​டங்​கள் கண்​காணிப்பு மற்​றும் நிதி முன்​னேற்​றம், மின் உற்​பத்​தி, தடை​யில்லா மின் விநி​யோகம் குறித்து ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

குறிப்​பாக, இதற்கு முன் நடந்த கூட்​டங்​களில் அனைத்து வட்​டங்​களி​லும் தேவை​யான தளவாடப் பொருட்​களை மழைக்கு முன்​பாக இருப்பு வைக்க வேண்​டும் என அறி​வுறுத்​திய நிலை​யில், அது சரி​யாக மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளதா என்​பதை உயர​தி​காரி​கள் கண்​காணித்து அறிக்கை மற்​றும் புகைப்​படங்​கள் அனுப்​ப​வும், வடகிழக்கு பரு​வ​மழை சீரமைப்பு பணி​களை விரைந்து முடித்​து, தயார் நிலை​யில் இருக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தில் பசுமை எரிசக்​திக் கழக மேலாண்மை இயக்​குநர் அனீஸ் சேகர், மின் உற்​பத்தி கழக மேலாண்மை இயக்​குநர் கோவிந்த ராவ், இணை மேலாண்மை இயக்​குநர் விஷு மஹாஜன், அனைத்து இயக்​குநர்​கள் மற்​றும் தலை​மையக உயர் அலு​வலர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in