நலதிட்டங்களை செயல்படுத்துவதில் திமுகவினரின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது: ஸ்டாலினிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார்

நலதிட்டங்களை செயல்படுத்துவதில் திமுகவினரின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது: ஸ்டாலினிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் காங்​கிரஸ் எம்​.பி. தொகு​தி​களில் மக்​கள் நலதிட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் திமுக​வினரின் ஒத்​துழைப்பு குறை​வாக உள்​ளது என்று காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் முதல்​வர் ஸ்டா​லினிடம் நேற்று புகார் தெரி​வித்​தனர்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் விஷ்ணுபிர​சாத், ஜோதி​மணி, கோபி​நாத், விஜய் வசந்த், ஆர்​.சு​தா, ராபர்ட் புரூஸ் ஆகியோர் சென்​னை​யில் முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லினை நேற்று சந்​தித்​தனர். அப்​போது, கனி​மொழி எம்​.பி.​யும் உடன் இருந்​தார்.

இந்த சந்​திப்​பின்​போது, ஒவ்​வொரு எம்​.பி.க்​கும் அவகாசம் கொடுத்​து, தொகுதி பிரச்​சினை​கள் மற்​றும் கோரிக்​கைகளை முதல்​வர் கேட்​டறிந்​தார். அனைத்து எம்​.பி.க்​களும் தங்​கள் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை​யும் ஸ்டா​லினிடம் வழங்​கினர்.

மேலும் திமுக நிர்​வாகி​கள் யார் பெயர்​களை​யும் குறிப்​பி​டா​மல், “காங்​கிரஸ் எம்​.பி. தொகு​தி​களில் மக்​கள் நலதிட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் திமுக​வினரின் ஒத்​துழைப்பு குறை​வாக உள்​ளது. அரசு விழாக்​களுக்கு அழைப்​ப​தில்​லை. எம்​.பி. தொகுதி நிதி​யில் திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்கு திமுக​வினர் ஒத்​துழைப்பு தரு​வ​தில்​லை. மக்​களவை தேர்​தல் முடிந்து ஓராண்டு ஆகி​யும், திமுக மக்​கள் பிர​தி​நி​தி​களை கொண்ட உள்​ளாட்சி அமைப்​பு​கள், காங்​கிரஸ் எம்​.பி.க்​களுக்கு அலு​வல​கம் அமைத்து தரவில்​லை. அதனால் திமுக நிர்​வாகி​களுக்கு உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தினர்.

இக்​கூட்​டத்​தின் முடி​வில், செல்​வப்​பெருந்​தகை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: காங்​கிரஸ் எம்​.பி.க்​களின் தொகு​தி​யில் சிறு சிறு வேலைகள் விரைந்து முடிக்க வேண்​டும் என கோரிக்கை வைத்​தனர். முதல்​வர் ஸ்டா​லின் உடனடி​யாக துரித​மாக அதை செயல்​படுத்தி முடிக்​கப்​படும் என உறுதி அளித்​துள்​ளார். சில தொகு​தி​களில் எம்​.பி.க்​களுக்கு அலு​வல​கம் இல்​லாதது தொடர்​பாக​வும் நடவடிக்கை எடுப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார்.

தொகு​தி​களுக்கு என்​னென்ன வேண்​டும் என்​றும் கேட்​டார். எங்​கள் கோரிக்​கைகளை கேட்​டறிந்​து, அனைத்​தும் செய்து கொடுப்​ப​தாக உறு​தி​யளித்​துள்​ளார். தேர்​தலில் இணைந்து பணி​யாற்ற வேண்​டும் என்பது குறித்​தும் இந்த கூட்​டத்​தில் பேசப்​பட்​டது. தி​முக-காங்​கிரஸ் இடையே எந்​த​வித கருத்​து வேறு​பாடும்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in