கப்பல் கட்டுமானத் துறையில் 2047-ல் இந்தியா முன்னணி நாடாகும்: மத்திய அமைச்சர் சர்​பானந்த சோனா​வால் தகவல்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 10-வது பட்டமளிப்பு விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார். அருகில், மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி வி.ஷங்கர் ஆகியோர் உள்ளனர்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 10-வது பட்டமளிப்பு விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார். அருகில், மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி வி.ஷங்கர் ஆகியோர் உள்ளனர்.
Updated on
1 min read

சென்னை: 2047-ம் ஆண்​டில் கப்​பல் கட்​டு​மானத் துறை​யில் உலக அளவில் இந்​தியா முன்​னணி நாடாகத் திகழும் என்று மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் கூறி​னார். சென்னை கிழக்கு கடற்​கரைச்​சாலை செம்​மஞ்சேரியில் உள்ள இந்​திய கடல்​சார் பல்​கலைக்​கழகத்​தின் 10-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது.

இதில் மத்​திய அமைச்​சர் சர்​பானந்த சோனா​வால் பங்​கேற்​று, பல்​கலை. அளவில் சிறப்​பிடம் பெற்ற மாணவ-​மாணவி​களுக்கு தங்​கப்பதக்​கங்​கள் அணி​வித்​து, பட்​டங்​களை வழங்​கி​னார். வெவ்​வேறு படிப்​பு​களில் 2,196 பேர் பட்​டம் பெற்​றனர்.

பின்​னர், மத்​திய அமைச்​சர் பேசி​ய​தாவது: உலக அளவில் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு தேவை​யான மனித வளத்தை இந்​திய கடல்சார் பல்​கலைக்​கழகம் உரு​வாக்கி வரு​கிறது.

இத்​துறை​யில் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகி வரு​வ​தால், கப்​பல் போக்​கு​வரத்து சார்ந்த படிப்​பு​களை படிக்​கும் மாணவர்​களுக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ளது. கடந்த 10 ஆண்​டுக்கு முன்பு நம் நாட்​டில் 1.25 லட்​ச​மாக இருந்த மாலுமிகளின் எண்ணிக்கை தற்​போது 3 லட்​ச​மாக அதி​கரித்​துள்​ளது.

கப்​பல் கட்​டு​மானத் துறை​யில் 2047-ல் உலகின் 5 முன்​னணி நாடு​களில் ஒன்​றாக இந்​தியா இருக்​கும். அதற்​கான உத்​தி​கள் மற்​றும் செயல்​திட்​டங்​கள் வகுக்​கப்​பட்​டு, உலகளா​விய உள்​கட்​டமைப்பு உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. கப்​பல் கட்​டு​தல், பழைய கப்​பல்களை உடைத்​தல் மற்​றும் மறு சுழற்சி செய்​தல் போன்ற தொழில்​களுக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளிக்​கிறது. இதற்​காக விசாகப்​பட்​டினத்​தில் சிறப்பு தொழில்​நுட்ப மையம் நிறு​வப்​பட்​டுள்ளது.

கடல்​சார் துறை​யின் வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்​கி​யுள்​ளது. அண்​மை​யில் நடை​பெற்ற மத்​திய அமைச்​சர​வைக் கூட்​டத்​தில், கடல் சார்ந்த 3 அம்​சங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இது இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை​யில் பெரிய எழுச்​சியை உண்​டாக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மத்​திய துறை​முகம் மற்​றும் கப்​பல் போக்​கு​வரத்​துத் துறைச் செயலர் டி.கே.​ராமச்​சந்​திரன் சிறப்​புரை​யாற்​றி​னார். அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா பேசும்​போது, தேசிய நீர்​வழிப்​பாதை​யாக அங்​கீகரிக்​கப்​பட்​டுள்ள, 796 கி.மீ. தொலைவு கொண்ட காக்​கி​நாடா - மரக்​காணம் இடையி​லான பக்​கிங்​ஹாம் கால்​வாய் சரக்கு போக்​கு​வரத்து திட்​டத்தை விரைந்து செயல்​படுத்​து​மாறு மத்​திய அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​தார். முன்​ன​தாக, துணைவேந்​தர் மாலினி வி.ஷங்​கர்​ வரவேற்​று, ஆண்​டறிக்​கை சமர்ப்பித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in