நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல்

விருதுநகரில் நேற்று நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். உடன், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர்.
விருதுநகரில் நேற்று நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். உடன், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

விருதுநகர்: ​‘முதல்​வர் எவ்​வளவோ திட்​டங்​களை தீட்​டி​னாலும், அவை மக்​களைச் சென்​றடைய அலு​வலர்​களின் பங்​களிப்பு மிக​வும் முக்​கி​யம்’ என்று துணை முதல்​வர் உதயநிதி கூறி​னார்.

விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று அனைத்​துத் துறை அலு​வலர்​கள் பங்​கேற்ற கலந்​தாய்​வுக் கூட்​டத்​தில் துணை முதல்​வர் பேசி​ய​தாவது: மக்​களை தேடிச் சென்று மனுக்​களை பெற்​று, அவற்​றுக்கு விரை​வாக தீர்​வு​களை வழங்க வேண்​டும். பொது​மக்​களை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களுக்கு வரவழைக்​கும் வகை​யில், உரிய விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். கலைஞர் விளை​யாட்டு உபகரணங்​களை அனைத்து ஊராட்​சிகளுக்​கும் விநி​யோகித்​து, அவை பயன்​படுத்​து​வதை உறு​தி​செய்ய துணை வட்​டார வளர்ச்சி அலு​வலர்​களை பொறுப்​பாளர்​களாக நியமிக்க வேண்​டும்.

முதல்​வர் எத்​தனையோ திட்​டங்​களை தீட்​டி​னாலும், அரசு அலு​வலர்​கள் சிறப்​பாகச் செயல்​பட்​டால்​தான், அந்த திட்​டங்​கள் பொது​மக்​களை சென்​றடை​யும். அரசு அலு​வலர்​கள் அரசுக்​கும், மக்​களுக்​கும் பால​மாக செயல்​படு​வது அவசி​யம். இவ்​வாறு அவர் பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “அரசு திட்​டப்பணி​களில் தொய்​விருந்​தால் அதற்​கான காரணத்தை ஆராய்ந்​து, அவற்றை சரி செய்​வது குறித்து அதி​காரி​களுக்கு அறி​வுரை வழங்​கினேன். அனைத்து திட்​டங்​களை​யும் உரிய காலத்​தில் நிறைவேற்ற வேண்​டுமென அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​றார்.

தொடர்ந்​து, விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி கலை​யரங்​கில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் 837 பயனாளி​களுக்கு ரூ.10.84 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை உதயநிதி வழங்​கி​னார். மேலும், ரூ.124 கோடி​யில் பல்​வேறு புதிய திட்​டப் பணிகளுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், ரூ.25.89 கோடி​யில் முடிவுற்ற திட்​டப் பணி​களைத் திறந்​தும் வைத்​தார். இந்த நிகழ்ச்​சிகளில், அமைச்​சர்​கள் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்​ரா, ராம​நாத​புரம் எம்​.பி. நவாஸ்​க​னி, காவல் கண்​காணிப்​பாளர் கண்​ணன், எம்​எல்​ஏக்​கள் சீனி​வாசன், அசோகன், தங்​கப்​பாண்​டியன், சிவ​காசி மேயர் சங்​கீதா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in