மல்லை சத்யா தலை​மை​யில் புதிய அமைப்பு: பெயர், கொள்​கைகளை முடிவு செய்ய 15 பேர் குழு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் தொடங்க உள்ள புதிய அமைப்பின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் பங்கேற்றனர்.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் தொடங்க உள்ள புதிய அமைப்பின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் பங்கேற்றனர்.
Updated on
1 min read

காஞ்​சிபுரம்: மதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட மல்லை சத்யா தலை​மை​யில் புதிய அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. புதிய கொடி மட்​டும் தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்ட நிலை​யில் நவ. 20-ம் தேதி பெயர் அறிவிக்​கப்பட உள்​ளது.

காஞ்​சிபுரத்​தில் அறிஞர் அண்​ணா​வின் 117-வது பிறந்த நாள் முப்​பெரும் விழா நேற்று நடை​பெற்​றது. இந்த விழாவுக்கு கராத்தே எம்.பழனி​சாமி தலைமை தாங்​கி​னார். இதில் மதி​முக​வில் இருந்து வெளி​யேறிய நிர்​வாகி​கள் மல்லை சத்​யா, திருப்​பூர் துரை​சாமி, நாஞ்​சில் சம்​பத் உட்பட செவ்​வந்​தி​யப்​பன், வல்​லம் பஷீர், வாசுகி பெரி​யார்​தாசன் என முக்​கிய நிர்​வாகி​கள் பலர் பங்​கேற்​றனர்.

இந்​தக் கூட்​டத்​தில் பேசிய பலர் மதி​முகவை​யும், அதன் பொதுச் செயலர் வைகோ, முதன்​மைச் செயலர் துரை வைகோ ஆகியோரை கடுமை​யாக விமர்​சித்து பேசினர். இந்​தக் கூட்​டத்​தில் பேசிய பலர் புதிய கட்சி தொடங்க வேண்​டும் என்று வலியுறுத்தினர்.

இந்​தக் கட்​சி​யில் தியாகம் செய்​தவர்​கள் பலர் தூக்கி எறியப்​பட்​டுள்​ளனர் என்​றும், மகனுக்​காக தற்​போது கட்சி நடை​பெறுகிறது என்​றும் வரலாறு ஒரு​போதும் வைகோவை மன்​னிக்​காது என்​றும் இந்​தக் கூட்​டத்​தில் பேசிய மல்லை சத்யா உள்​ளிட்டோர் குற்றம் சாட்​டிப் பேசினர்.

இந்​தக் கூட்​டத்​தில் அமைப்​பின் பெயர் குறித்​தும், இது அரசி​யல் கட்​சி​யா? அமைப்​பா? என்​பது குறித்​தும் முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. புதிய அமைப்​புக்​கான கொடி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. மஞ்​சள் நிறத்​தில் 9 நட்​சத்​திரங்​கள் கொண்ட கருப்​பு, சிவப்பு கொடி வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. சிவப்பு பகுதியில் நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்​தக் கூட்​டத்​தில் பலருக்கு அண்ணா சிலை​யுடன் கூடிய நினை​வுப் பரிசுகள் வழங்​கப்​பட்​டன. அந்த நினை​வுப் பரிசில் திராவிடக் குடியரசு விடு​தலைக் கழகம் என்​றும் பெயர் இடம் பெற்​றுள்​ளது. புதிய அமைப்பை அரசி​யல் கட்​சி​யாக அறிவிக்க வேண்​டும் என்ற கருத்தை பலர் இந்த மாநாட்​டில் வலி​யுறுத்​தினர். இந்​தக் கூட்​டத்​தில் 10 பேருக்கு திரா​விட ரத்னா விருது வழங்கப்பட்​டது. இந்த அமைப்​புக்கு நவ.20-ல் பெயர் அறிவிக்​கப்​படும் என்று தெரி​வித்​துள்​ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in