இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! - இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்

இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! - இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்
Updated on
4 min read

“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், டெல்லி வந்திருந்த இலங்கையின் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறையின் துணை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரலிங்கம் பிரதீப்பை ‘இந்து தமிழ் திசை’க்காக சந்தித்துப் பேசினோம்.

இந்திய வம்சாவளி அமைச்சர்களில் மூவரில் ஒருவரான நீங்கள் மலையகத் தமிழர்களுக்காக சாதித்ததைக் கூற முடியுமா?

கல்வி மூலமே எங்​கள் சமூகத்​தின் விடிவு தங்​கி​யுள்​ளது. இதை நன்கு உணர்ந்​து, இந்​திய வம்​சாவளி மக்​களுக்​கான பாட​சாலை​களின் பவு​திக, மனித வள அபி​விருத்தி பணி​களை முனைப்​போடு முன்​னெடுத்து வரு​கிறேன். காணி, கட்​டிடம், ஆசிரியர் பற்​றாக்​குறையை நிவிர்த்​திக்​கும் பணி​கள் துரித​மாக நிறை​வேற்​றப்​படு​கிறது. வறுமை​யில் உள்ள தோட்​டத் தொழி​லா​ளர்​களின் சுகா​தா​ரம், தோட்ட உட்​கட்​டமைப்​பு, வீடமைப்பு உள்​ளிட்ட பல்​வேறு அபி​விருத்​திக்கு இது​வரை இல்​லாத நிதியை எங்​கள் அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ளது. அவர்​களுக்​கான காணி உரிமை​களை பெற்​றுக்​கொடுக்​கும் முயற்​சி​யிலும் ஈடு​பட்​டுள்​ளேன்.

இந்​திய வம்​சாவளி மக்​களின் கலை கலா​சார விழு​மி​யங்​களை​யும், பண்​பாட்டு அம்​சங்​களை​யும் தாய் மொழி​யாம் தமிழ் மொழியை​யும் பேணிப் பாது​காக்க வேண்​டும். இந்த உறு​தி​யில் சுதந்​திரத்​திற்கு பின் இது​வரை இருந்த அரசுகளை விட எமது தேசிய மக்​கள் சக்தி அரசு முற்​போக்​காக​வும், சிறு​பான்மை மக்​களின் உரிமை​களை பேணி பாது​காப்​ப​தில் உறு​தி​யுட​னும் செயல்​படு​கிறது.

மலையகத் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டித் தரும் வீடுகளை வழங்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இந்தத் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது?

இந்​திய அரசின் நிதி உதவி​யுடன் இந்​திய வம்​சாவளி மக்​களுக்கு வீடு​களை பெற்​றுக்​கொடுப்​பது துரிதப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. பாதி​யில் கைவிடப்​பட்ட வீட்​டுத் திட்​டங்​களுக்கு நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு அப்​பணி​கள் முன்​னெடுக்​கப்​படு​கின்​ற​ன.10 ஆயிரம் வீடு​களைக் கட்​டிக்​கொடுக்​கும் திட்​டத்​தில் முந்​தைய அரசுகள் தொடங்​கிய பணி​கள் அரைகுறை​யாக நிற்​கின்​றன. அவற்றை முழு​மை​யாக கட்​டி​முடித்து மக்​களிடம் ஒப்​படைக்​கும் தார்​மிக பொறுப்பு எம்​மிடம் உள்​ளது. மேலும் 4,700 வீடு​களை கட்டி முடிக்க தேவை​யான ஆரம்ப கட்ட நடவடிக்​கை​களை​யும் எடுத்​துள்​ளேன்​.

தோட்டத் தொழிலுக்காக வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் இப்போது உயர்ந்திருக்கிறதா?

இன்று இலங்​கை​யில் இந்​திய வம்​சாவளி தமி​ழர்​கள் அனை​வ​ருமே தோட்ட தொழி​லா​ளர்​கள் தான் என்ற நிலை இல்​லை. கணிச​மான​வர்​கள் அரசுப் பணி​களில் இருக்​கி​றார்​கள். பலர் வர்த்​தகர்​களாக​வும், சுயதொழில் செய்​வோ​ராக​வும் இருக்​கி​றார்​கள். இன்​னும் பலர் வெளி​நாட்டு வேலை​வாய்ப்​பு​களை பெற்று மத்​திய வகுப்பு பொருளா​தார நிலை​யில் உள்​ளனர். என்​றாலும் இன்​ன​மும் தோட்​டத் தொழி​லா​ளர்​களாகவே வறுமை​யில் வாடும் மக்​களும் இருக்​கத்​தான் செய்​கி​றார்​கள். அவர்​களுக்​கான சுகா​தா​ரம், கல்​வி, வீடமைப்​பு, தோட்ட உட்​கட்​டமைப்பு உள்​ளிட்ட அபி​விருத்தி பணி​களுக்​காக முன்​னொரு​போதும் இல்​லாத அளவுக்கு இப்​போது நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த 76 ஆண்​டு​களாக இலங்​கை​யில் ஆட்​சியி​லிருந்த அரசுகள் இந்த மக்​களின் தேவை​களை பூர்த்தி செய்​வ​தில் பெரி​தாக ஆர்​வம் காட்​ட​வில்​லை. வாக்​கு​களை மட்​டும் பெற்​றுக்​கொண்டு அவர்​களின் வாழ்க்​கை​தரத்​தைப் புறக்​கணித்​தார்​கள். ஆனால் எங்​களின் தேசிய மக்​கள் சக்தி அரசு, இம் மக்​களின் முன்​னேற்​றத்​திற்​கான ‘ஹட்​டன் பிரகடனம்’ எனும் வேலை​வாய்ப்பு திட்​டத்தை வெளி​யிட்​டது. மலையக மக்​களின் வாழ்க்​கை​தரத்தை முன்​னேற்​று​வதற்​காக அவ் வேலைத்​திட்​டத்தை அரசு இப்​போது விரை​வாக முன்​னெடுத்து வரு​கிறது.

தமிழகத்து முகாம்களில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்... அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துக்கொள்ள உங்கள் அரசு முயற்சிக்குமா?

இலங்​கை​யில் ஏற்​பட்ட அசா​தாரண சூழலால் பல்​வேறு நாடு​களுக்கு தமிழ் மக்​கள் சென்​றாலும், இந்​தி​யா​வுக்​குத் தான் அதி​க​மானோர் அகதி​களாக வந்​தனர். இன்று வரை அம்​மக்​கள் இந்​தி​யா​வுக்​கும் உரித்​தில்​லாமல், இலங்​கைக்​கும் சொந்​தமில்​லாமல் அகதி​களாக காலம் கழிப்​பது எவ்​வகை​யிலும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. அம்​மக்​களின் அபிலாசைகளை கேட்​டறிந்து இரு நாட்டு அரசுகளும் பேசி அவர்​களின் பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்​வினை பெற்​றுக்​கொடுக்க வேண்​டும். நாங்​கள் அகதி​கள் விட​யத்​தில் நிச்​சய​மாக கரிசனை​யுடன் செயல்​படு​வோம். எதிர்​காலத்​தில் இவ்​விட​யத்​தில் பயனுள்ள பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி தீர்வு காண்​ப​தில் முன்​நின்று செயல்​படு​வோம்​.

இலங்கையின் புதிய அதிபர் ஆட்சியில் தமிழர்கள் முன்னேற்றத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

உண்​மை​யில் இலங்​கை​யில் இதுவரை ஆட்சி அதிகாரத்​தில் இருந்​தவர்​களும், அதிபர்​கள், பிரதமர்கள் உள்ளிட்ட அனைவ​ரும் இனவாதத்தை மையப்​படுத்​தியே ஆட்சிக்கு வந்ததுடன் அதை நடைமுறை​யும் படுத்​தி​னார்​கள். ஆனால் இலங்கை வரலாற்றில் முதல்​முறை​யாக, தமிழ், முஸ்​லிம், சிங்​களம் என அனைத்து இன மக்களின் ஆதரவை​யும் பெற்று தோழர் அனுர குமார திசா​நாயக்க இன்று ஆட்சி​யில் உள்ளார். இங்கு அனைத்து இன மக்களுக்​கும் பிரச்சினைகள் உள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி​யானது தமிழ் மக்களின் பிரச்சினை​களை​யும் இனம் கண்டுள்​ளது. நிச்​சயமாக தமிழ் மக்களின் பிரச்சினை​களுக்கு தீர்​வுகளை பெற்றுக் கொடுப்​போம். தற்போது தமிழ் மக்களுடைய அதிகூடிய விருப்பும் ஆதரவும் அனுர குமார திசா​நாயக்​க​வுக்கே உள்ளது. எனவே, தமிழர்​களுக்கான பிரச்சினை​களுக்கு நிச்​சயம் தீர்வு காண்​போம்​.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதே..?

இலங்​கையை பொறுத்​தவரை உலக நாடு​கள் அனைத்​துட​னும் நல்​லதோர் நட்​புறவையே பேண விரும்​பு​கின்​றோம். சீனா​வின் ஆதிக்​கம் இலங்​கை​யில் இருப்​ப​தாக கூறுகி​றார்​கள். ஆனால், இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட அனைத்து உலக நாடு​களு​ட​னும் சினேகபூர்​வ​மான நட்​புற​விலேயே நாங்​கள் இருக்​கி​றோம்​.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை எப்படி இருக்கிறது?

எமது சக ஆசிய நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையிலேயே பாகிஸ்தானுடனான எமது தொடர்பு காணப்படுகின்றது. பாகிஸ்தான் அரசுடன் வர்த்தக ரீதியிலும் சுமுகமான உறவு எங்கள் நாட்டிற்கு உண்டு.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவு இலங்கைக்கு எப்படி உள்ளது?

பிரதமர் மோடி அவர்​கள் மலையக மக்​களுக்​காக 10 ஆயிரம் வீடு கட்​டித்​தரும் திட்​டத்தை அறி​வித்​துள்​ளார்​கள். இது தவிர மேலும் பல்​வேறு வீட்​டுத்​திட்​டங்​கள் வடக்கு கிழக்கு மக்​களுக்​காக நடை​முறைப்​படுத்​தப்​படு​கிறது. எம்மை பொறுத்​தவரை இந்​தியா உலகின் பலமான வல்​லரசுகளில் ஒன்​று. பொருளா​தா​ரத்​தில் வளர்ந்த நாடு என்ற அடிப்​படை​யில் இந்​தி​யா​வின் தொடர்பு எங்​களுக்கு முக்​கி​யம். இந்​தி​யா​வின் ஊடாக எங்​களது பொருளா​தார வளர்ச்​சியை முன்​னெடுக்க வேண்​டிய தேவை எமக்​குள்​ளது. எனவே, மோடி அரசாங்​கத்​துடன் மிக நெருங்​கிய தொடர்​பு​களை பேணி இலங்கை அரசு செயல்​படு​கிறது.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டுவிட்டதா... இந்த விஷயத்தில் இலங்கைக்கான இந்தியாவின் நேசக்கரம் எப்படி இருக்கிறது?

உண்​மை​யில் பொருளா​தார வீழ்ச்​சிலிருந்து தற்​போது இலங்கை கட்​டம் கட்​ட​மாக முன்​னேறி வரு​கிறது. ஐஎம்​எஃப் கூட எமது பொருளா​தார வளர்ச்​சியை பாராட்டி வரு​கின்​ற​னர். எங்​கள் நாட்​டின் பொருளா​தார சிக்​கலை சமாளிக்க இந்​திய அரசு எமக்கு வழங்​கிய கடன்​களை​யும் உதவி​களை​யும் நாங்​கள் ஒரு​போதும் மறக்க முடி​யாது. இந்​தி​யா​வின் உதவி எமது பொருளா​தார வளர்ச்​சி​யில் பெரும் பங்​களிப்பை செய்​கின்​றது. எனவே, எதிர்​காலத்​தி​லும் இந்​தி​யா​வின் உதவி தொடர்ச்​சி​யாக கிடைக்​கும் பட்​சத்​தில் நாங்​கள் மிகக் குறுகிய காலத்​தில் நிச்​ச​யம் பொருளா​தார வளர்ச்​சி​யைக் காண்​போம்​.

இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு உண்மையில் என்ன தான் காரணம்?

மீன​வர்​களுக்​குள் பிரச்​சினை வரக் காரண​மாக இருப்​பது எல்​லைப் பிரச்​சினை​தான். கடல் வளம் நிச்​ச​யம் பாது​காக்​கப்பட வேண்​டும். தடை செய்​யப்​பட்ட மீன் பிடிப்பை நாம் வெறுக்​கி​றோம். எதிர்​கால சந்​த​தி​யினர் கடல் வளத்தை பயன்​படுத்​தும் வகை​யில் அதனை பேணிப் பாது​காப்​பது நம் அனை​வரது கடமை. எனவே, சட்​ட​விரோத​மான முறை​யில் கடலில் மீன் பிடிப்​பது நீரியல் சூழலுக்கு பெரும் பாதிப்​பினை ஏற்​படுத்​துகின்​றது. இதனை நாங்​கள் அனு​ம​திக்க முடி​யாது. இதனால், தொடர்ச்​சி​யாக இலங்கை மீன​வர்​களை இந்​திய அரசும் இந்​திய மீன​வர்​களை இலங்கை அரசும் கைது செய்​வதை காண்​கின்​றோம். இது​வும் இரு​நாட்டு தமி​ழர்​களுக்கு இடையி​லான பிரச்​சினை தானே தவிர சிங்கள மீன​வர்​கள் சம்​மந்​தப்​பட்​டது அல்​ல.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைதாகி வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க என்ன தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?

மீன​வர்​கள் பிரச்​சினை​கள் தொடர்​பாக இந்​திய அரசும் இலங்கை அரசும் மனம் திறந்து பேச வேண்​டும். அப்​போது தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்​கும். இது தொடர்​பாக சிறந்த பயனுள்ள கலந்​துரை​யாடல்​களை நடத்தி இரு​நாட்டு அரசுகளும் இணைந்து சிறந்த தீர்​மானங்​களை எடுக்க முடி​யும். இரு​நாட்டு அரசுகளும் சிறந்த நட்​புறவுடன் இருப்​ப​தால் இந்​தப் பிரச்​சினைக்கு சுமுக​மான தீர்வு எட்​டலாம் என நினைக்​கின்​றேன். தொப்​புள்​கொடி உறகளுக்கு இடையி​லான மீன​வர் பிரச்​சினையை ஏன் பேசித் தீர்க்க முடி​யாது? அதற்​கான வாய்ப்பை இரு​நாட்​ட​வ​ரும் மீன​வர்​களுக்கு ஏற்​படுத்​தித் தர வேண்​டும். இது தொடர்​பாக நாம் மீன​வர் சங்​கங்​களு​டன் கதைத்​துக் கொண்​டிருக்​கி​றோம்​.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறதே..?

கச்​சத்​தீ​வானது ஒப்​பந்த அடிப்​படை​யில் சர்​வ​தேச சட்ட ரீதி​யாக இந்​திய அரசால் இலங்​கைக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​தச் சட்​டத்தை மீறி இலங்​கை​யிட​மிருந்து அத்​தீவை யாரும் அபகரிக்க முடி​யாது. இதை இரு​நாட்டு மீன​வர்​களும் பயன்​படுத்​தலாம். தமிழ்​நாட்​டில் தேர்​தல் வரும்​போது மட்​டுமே கச்​சத்​தீவு குறித்​தான விவாதங்​களும் பேச்​சுகளும் எழுகின்​றன. அதனால், இதை ஓர் அரசி​யல் பேச்​சாகவே நாம் கொள்​கி​றோம்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in