மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் 11-வது காமன்​வெல்த் நாடாளு​மன்ற சங்​கத்​தின் இந்​திய பிராந்​திய மாநாடு நடை​பெற்​றது. இதில் தமிழகம் சார்​பில் சட்​டப் ​பேரவை தலை​வர் அப்​பாவு, துணைத் தலை​வர் பிச்​சாண்டி ஆகியோர் பங்​கேற்​றனர்.

மாநாட்​டில் அப்​பாவு பேசி​ய​தாவது: அமை​தி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்​றும் இருந்​தால்​தான், மாநிலங்​கள் சிறப்​பாக இருக்க முடியும் என்ற அடிப்​படை​யிலேயே இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய - மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்​கிய​மான​தாக இருப்​ப​தற்​காக கடந்த காலங்​களில் ராஜமன்​னார், சர்க்​காரி​யா, வெங்​க​டாசலய்​யா, புஞ்சி தலைமையி​லான குழுக்​கள் பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கி​யுள்​ளன.

மாநில ஆளுநரை நியமிக்க, முதல்​வரின் ஆலோ​சனையை பெற வேண்​டும் என்​றும் பரிந்​துரை செய்​யப்​பட்​டது. சமீப​கால​மாக, அரசி​யலமைப்பு சட்​டத்​தில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​ப​டா​மல், நிர்​வாக ரீதி​யான அறி​விப்​பு​கள், அரசாணை​கள் மூல​மாக கனிமவளம், மீன்​வளம், கூட்​டுறவு சங்​கங்​களுக்​கான அதி​காரங்​கள் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்​கப்​பட்​டுள்​ளன. இது கூட்டாட்​சிக்கு மிகப்​பெரிய பின்​னடைவு.

மேலும், மத்​திய அரசு, மாநிலங்​களின் கருத்தை கவனத்​தில் கொள்​ளாமல் பொருட்​கள் மீது பல்​வேறு வரி​களை விதிக்​கிறது. எந்​த​வித​மான நிதிப் பகிர்​வை​யும் மத்​திய அரசு ஒழுங்​காக மேற்​கொள்​வது இல்​லை. ஒருங்​கிணைந்த கல்வி (சமக்ர சிக் ஷா) திட்​டத்​தின்​கீழ் மாநில அரசுக்கு தரவேண்​டிய ரூ.2,152 கோடி நிதியை மத்​திய அரசு இது​வரை விடுவிக்​க​வில்​லை. தனி​யார் பள்​ளி​களில் ஏழை குழந்​தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்​கீட்​டுக்​கான மத்​திய அரசின்பங்​களிப்​பான 60 சதவீத நிதியை கடந்த 4 ஆண்​டு​களாக ஒதுக்​க​வில்​லை.

100 நாள் வேலை திட்ட நிதி குறைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனாலும், தமிழக அரசு 11.19 சதவீத வளர்ச்சி பெற்​றுள்​ளது. கடந்த 2019-24 கால​கட்​டத்​தில் 17-வது மக்​களவை​யில் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாக்​களுக்கு குடியரசுத் தலை​வர் ஓரிரு நாட்​களில் ஒப்​புதல் அளித்து சட்​ட​மாக்​கப்​பட்​டன. ஆனால், தமிழகத்தில்ஆளுநர் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்ட மசோ​தாக்​கள் ஆண்​டுக்​கணக்​கில் காத்​திருக்​கின்​றன.

இதனால், மக்​கள் நல திட்​டங்​களுக்கு நிதி ஒதுக்​கு​வ​தில் மாநில அரசுக்கு சிரமம் ஏற்​பட்டுள்​ளது. ஜெர்​மனி​யில் 16 மாநிலங்​கள் உள்​ளன. மாநில அரசுகளு​டன் அதி​காரத்தை ஜெர்​மனி அரசு சம​மாக பகிர்ந்து கொள்​கிறது. பிரதமர் மோடி குஜ​ராத் முதல்​வ​ராக இருந்​த​போது கூறிய கருத்​தின் அடிப்​படை​யில், மாநிலங்​களுக்கு முழு​மை​யாக நிதி சுயாட்சி வழங்க வேண்​டும்அல்​லது மாநிலங்​களுக்​கான ஜிஎஸ்டி பங்​கை 75 சதவீத​மாக உயர்த்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in