இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்

இந்திய துணை தூதர் சாய்முரளி மற்றும் யாழ்ப்பாணம் வட மாகாண ஆளுநர் வேதநாயகன்.
இந்திய துணை தூதர் சாய்முரளி மற்றும் யாழ்ப்பாணம் வட மாகாண ஆளுநர் வேதநாயகன்.
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல் மைல் தொலை​வில் உள்​ளது.

இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக, அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் பருத்​தித்​துறை துறை​முகம் சேதமடைந்​தது. 1995-ல் விடு​தலைப் புலிகளிடம் இருந்து இந்த துறை​முகம் இலங்கை ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​டது.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி​யின்​போதும் இந்த துறை​முகம் கடும் சேதமடைந்​தது. 7 ஹெக்​டேர் பரப்​பளவு கொண்ட இந்த துறை​முகத்​தில் 300 படகுகள் வரை​ நிறுத்த முடி​யும், இந்நிலையில் இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தி, மீன் பதனிடும் அறை, விற்​பனை நிலை​யம் மற்​றும் எரிபொருள் நிரப்பு நிலை​யம் ஆகிய​வை​ அமைக்​கப்பட உள்​ளன.

இலங்​கை​யின் வட மாகாணப் பகு​தி​யில் கடல் அட்டை பண்ணை வளர்ப்​பில் கவனம் செலுத்தி வரும் சீன அரசு, இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில் உள்ள இந்த துறை​முகத்தை மேம்​படுத்த தீவிரம் காட்​டியது.

ஆனால், இலங்கை அமைச்​சரவை பருத்​தித்​துறை துறை​முகத்தை மேம்​படுத்த இந்​திய அரசுக்கே ஒப்​புதல் அளித்தது. இந்​நிலை​யில், பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகத்​தின் மேம்​பாட்டு திட்​டத்​துக்​காக, இந்​தி​யா​வின் மீன்​பிடித் துறை அமைச்​சகத்​தின்​கீழ் இயங்​கும் மீன் வளத்​துக்​கான மத்​திய கடலோரப் பொறி​யியல் நிறு​வனத்​தினர் யாழ்ப்​பாணம் சென்​றுள்​ளனர்.

இந்​தக் குழு​வினர் யாழ்ப்​பாணத்​தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளி​கை​யில், ஆளுநர் வேத​நாயகன் தலை​மை​யில் நடை​பெற்ற, பருத்தித்​துறை மீன்​பிடி துறை​முகத்​தின் மேம்​பாட்டு பணி​களுக்​கான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்​திய துணைத் தூதர் சாய் முரளி​யும் இதில் பங்​கேற்​றார். முன்னதாக, இந்திய தூதுக் குழு​வினரை வரவேற்ற ஆளுநர் வேத​நாயகன், இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரி​வித்​துக் கொண்​டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in