ஜிஎஸ்டி பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜிஎஸ்டி பயன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஜிஎஸ்டி குறைப்​பின் பயன்​கள் நுகர்​வோரை சென்​றடைய வேண்​டும் என்று தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஜிஎஸ்டி 4 அடுக்கு வரி​யாக விதிக்​கப்​பட்​டு, பொது​மக்​களுக்கு மிகப்​பெரும் சுமை​யாக மாறி​யிருந்​தது. இந்​நிலை​யில் பிரதமர் அறி​வித்​த​படி வரி சீர்​திருத்​தம் மூலம், ஈரடுக்கு வரி​யாக மாற்​றி, நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் அறி​வித்​திருப்​பது மகிழ்ச்​சிக்​குரியதே. ஆனாலும், இந்த வரி குறைப்பு பொது​மக்​களை​யும், நுகர்​வோரை​யும் சென்​றடைய வேண்​டும்.

அதீத வரி விதிப்​பால் அடித்​தட்​டு, நடுத்தர நுகர்​வோர்​ பயன்​பெற முடி​யாத நிலை​மையை கருத்​தில் கொண்​டு, பல்​வேறு பொருட்​களுக்கு வரிச்​சலுகை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனை பயன்​படுத்​தி, தயாரிப்​பாளர்​கள் மற்​றும் கார்ப்​பரேட் கம்​பெனிகள், விற்​பனை விலையை கூட்​டி, மத்​திய அரசு அறி​வித்​துள்ள வரிக்​குறைப்பு நுகர்​வோரை சென்​றடை​யாத நிலையை தயாரிப்​பாளர்​களும், கார்ப்​பரேட் நிறு​வனங்​களும் உரு​வாக்​கு​வ​தாக தகவல்​கள் வரு​கின்​றன.

இதன்​மீது மத்​திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்​து, இந்த வரி​குறைப்பு நடவடிக்கை நுகர்​வோரை​யும், பயனாளர்​களை​யும் சென்​றடை​யும் வகை​யில், அரசின் நிலைப்​பாட்டை உறு​தி​ செய்​து, நுகர்வோர் நலனை பாது​காக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்கையில் கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in