உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.ஐ - காவல் ஆணையர் அழைத்து பாராட்டு

உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த எஸ்.ஐ - காவல் ஆணையர் அழைத்து பாராட்டு
Updated on
1 min read

சென்னை: ​திடீர் உடல் நலக்​குறை​வால் உயிருக்​குப் போராடிய 2 வயது குழந்​தையை உரிய நேரத்​தில் மருத்​து​வ​மனை​யில் சேர்த்து உயிரைக் காப்​பாற்​றிய சிறப்பு எஸ்​ஐ-யை காவல் ஆணை​யர் அருண் நேரில் அழைத்து பாராட்​டி​னார். திரு​வொற்​றியூரில் உள்ள தனி​யார் மேல்​நிலைப் பள்ளி ஒன்​றில் கடந்த 26-ம் தேதி ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ குறைதீர் முகாம் நடை​பெற்​றது.

இதில், கலந்​து​கொண்ட வினோத்​கு​மார் என்​பவரது 2 வயது ஆண் குழந்​தைக்கு திடீரென வலிப்பு ஏற்​பட்​டது. அங்​கிருந்த மருத்​து​வக் குழு​வினர் உடனடி​யாக முதலுதவி சிகிச்சை அளித்​தும் சரி​யா​கவில்லை. இதை அங்கு பணியி​லிருந்த தொற்​று​நோய் மருத்​து​வ​மனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ மாரிதுரை கவனித்​தார், உடனடி​யாக அவர் அக்​குழந்​தையை தூக்​கிக் கொண்டு பொது​மக்​கள் உதவி​யுடன் இருசக்கர வாக​னத்​தில் விரைந்து அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தார்.

அங்கு குழந்​தைக்கு உயர் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. தற்​போது அந்த குழந்தை நலமுடன் உள்​ளது. சாமர்த்​தி​ய​மாக செயல்​பட்​டதால், குழந்தை காப்​பாற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அக்​குழந்​தை​யின் குடும்​பத்​தினர் சிறப்பு எஸ்ஐ மாரிதுரையை பாராட்​டினர். இதையறிந்த காவல் ஆணை​யர் அருண் நேற்று மாரிதுரையை நேரில் அழைத்து பா​ராட்டி சான்​றிதழ்​ வழங்​கி கவுர​வித்தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in