மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்
படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப் படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
Updated on
1 min read

மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதிகரித்​த​தால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் முழு கொள்ள​ளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறை​யாக எட்​டியது. அணை​யின் பாது​காப்பு கரு​தி, அணைக்கு வரும் நீர் முழு​வதும் காவிரி​யில் வெளியேற்றப்​பட்டு வந்​தது.

அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 29,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 23,300 கனஅடி​யாக குறைந்​தது. இதையடுத்​து, கடந்த 2 நாட்​களுக்கு பிறகு 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 8 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது.

அதே​நேரத்​தில், அணை​யின் நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 22,500 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 800 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

அணை நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 18 ஆயிரம் கனஅடி​யாக குறைந்​தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in