மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை புரசைவாக்கம் பிளவர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் பிளவர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை செய்தனர்.
Updated on
1 min read

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக பிரபல மருந்து நிறுவன உரிமை​யாளர் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். சென்​னை​யில் வசிக்​கும் வட மாநிலத்​தைச் சேர்ந்த பிரபல மருந்து நிறுவன உரிமை​யாளர், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தொடர்​பான புகாரின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சம்​பந்​தப்​பட்ட மருந்து நிறுவன உரிமை​யாளர் தொடர்​புடைய சுமார் 10 இடங்​களில் அடுத்​தடுத்து திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அந்த வகை​யில், புரசை​வாக்​கத்​தில் உள்ள அவரின் வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு 2 வாக​னங்​களில் விரைந்த 8 அதி​காரி​கள், துப்பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் சோதனை மேற்​ கொண்​டனர். இதே​போல், அவருக்​குச் சொந்​த​மாக அம்​பத்​தூரில் உள்ள மருந்து நிறுவன தொழிற்​சாலை​யிலும் சோதனை நடத்​தினர்.

அதைத் தொடர்ந்து கே.கே.நகர் விஜய​ராகவபுரத்​தில், கால​மான ஆடிட்​டர் ஒரு​வருக்கு சொந்​த​மான வீடு (வீட்​டில் ஆள் இல்​லாத​தால் போட்டோ மட்​டும் எடுத்​துச் சென்​றனர்), தி.நகர் மேட்​லி, 2-வது தெரு​வில் உள்ள வீடு​களி​லும் சோதனை நடை​பெற்​றது. சில இடங்​களில் வீடு மற்​றும் அலு​வல​கம் பூட்​டப்​பட்​டிருந்​த​தால் சோதனை நடத்​தாமல் அதி​காரி​கள் திரும்பிச் சென்​றனர்.

சோதனை தொடர்ந்து நடந்து வரு​கிறது. இதுகுறித்து அமலாக்​கத்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சட்​ட​விரோத பணப்​பரி ​மாற்ற குற்​றச்​சாட்​டில் சோதனை நடை​பெற்று வரு​கிறது. சோதனை நிறைவடைந்த பின்​னரே அது தொடர்​பான முழு விபரங்​களை வெளி​யிட முடி​யும்” என்​றனர். இதற்​கிடையே, அமலாக்​கத்​துறை சோதனை​யின்​போது பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in