Published : 11 Jul 2018 09:23 AM
Last Updated : 11 Jul 2018 09:23 AM

ஸ்டாலின் லண்டன் பயணம்: ஒரு வாரம் தங்கியிருக்க திட்டம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே 29-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஸ்டாலின் நேற்று அதிகாலை மனைவி துர்காவுடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அவரை மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நிர்வாகிகள் வழி அனுப்பினர்.

ஸ்டாலின், லண்டனில் ஒரு வாரம் தங்கியிருப்பார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாக முதல்கட்டமாக மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதில் தேசிய தலைவர்கள், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை திரும்பியதும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் ஸ்டாலின் கவனம் செலுத்துவார் என திமுக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x