மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் 16 கண் மதகு பகுதி.
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தண்ணீரின்றி பாறைகளாக காட்சியளிக்கும் 16 கண் மதகு பகுதி.
Updated on
1 min read

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 10,850 கனஅடி​யாக குறைந்​தது. நீர்​வரத்து சரிந்த நிலை​யில் அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது. கடந்த 6 நாட்​களுக்கு பிறகு உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது தற்​போது நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்​து, காவிரி டெல்டா பாசனத்​துக்கு மட்​டும் நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்த நிலை​யில், நேற்று மாலை முதல் தண்​ணீர் திறப்பு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அதே​போல், உபரிநீர் திட்​டத்​தில் ஏரி​களுக்​கும் தண்​ணீர் எடுக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது, அணை​யின் நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் நீடிக்​கிறது.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி அளவீட்​டின்​போது விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி​யாக​வும், மாலை 18 ஆயிரம் கனஅடி​யாக​வும் பதி​வான நீர்​வரத்து நேற்று காலை 6 மணி​யள​வில் 14 ஆயிரம் கனஅடி​யாக​வும், பகல் 2 மணி​யள​வில் 9,500 கனஅடி​யாக​வும் சரிவடைந்​தது. கர்​நாடக மாநிலத்​தில் உள்ள அணை​களில் இருந்து காவிரி​யில் திறந்து விடப்​படும் உபரி நீரின் அளவு குறைக்​கப்​பட்​ட​தால், ஒகேனக்​கல் காவிரி​யிலும் படிப்​படி​யாக நீர்​வரத்து குறைந்து வரு​கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in