Published : 05 Jul 2018 12:14 PM
Last Updated : 05 Jul 2018 12:14 PM

ரஜினியும் கமலும் இணைந்தால் புரட்சி ஏற்படாது; வறட்சிதான் ஏற்படும்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

 ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒன்றிணைந்தால் தமிழகத்தில் புரட்சிக்குப் பதிலாக வறட்சிதான் ஏற்படும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரஜினியும் கமல்ஹாசனும் அரசியலில் ஒன்றாக இணைந்தால் தமிழகத்தில் புரட்சி ஏற்படும் என நடிகர் விஷால் கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “ரஜினியும் கமலும் ஒன்றிணைந்தால் ஒரு புரட்சியும் ஏற்படாது. வறட்சிதான் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

டெல்லியில் ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலமைப்பு சட்டப்படித்தான் ஆளுநரும் தமிழக அரசும் செயல்படுகிறது. நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் செயல்படுகிறார். யாரும் எந்த விதியையும் மீறவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படியே ஆளுநரும் அரசும் செயல்படுகிறோம்” என பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x