மதுரை: தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து வாகனம் சேதம்

மதுரையில் தவெக மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் சேதமடைந்த கார்.
மதுரையில் தவெக மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் சேதமடைந்த கார்.
Updated on
2 min read

மதுரை: தவெக மாநில மாநாடு நடை​பெற உள்ள திடலில் 100 அடி உயர கொடிக்​கம்​பத்தை நேற்று அமைக்க முயற்​சித்​த​போது எடை தாங்காமல் சரிந்து விழுந்​தது. அரு​கில் இருந்​தவர்​கள் விலகி ஓடிய​தால் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர்.

மதுரை அரு​கே பாரப்பத்​தி​யில் தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு இன்று நடை​பெற உள்​ளது. கட்​சித் தலை​வர் விஜய் கொடியை ஏற்​று​வதற்​காக 100 அடி உயர கொடிக் கம்​பத்தை மேடை அருகே அமைக்​கத் திட்​ட​மிட்​டு, ஆழமான குழிதோண்டி கான்​கிரீட் அமைப்பை ஏற்​படுத்தும் பணி நடை​பெற்​றது.

நேற்று அதன் மீது ஒரு டன் எடை கொண்ட கொடிக்​கம்​பத்தை பொருத்​தும் பணி தொடங்கியது. கிரேன் உதவி​யுடன் கம்​பத்தை தூக்கி நிறுத்​தும் பணி நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது, திடீரென சரிந்து விழுந்​தது. உடனே அப்​பகு​தியில் நின்​று​கொண்​டிருந்​தவர்​கள் உடனடி​யாக விலகி ஓடிய​தால், அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். வேக​மாக சரிந்த கம்​பம், அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆளில்​லாத கார் மீது விழுந்​தது. இதில் காரின் மேற்​பகுதி சேதமடைந்​தது.

தகவலறிந்து உடனடி​யாக வந்த போலீ​ஸார், இதுகுறித்து விசா​ரணை நடத்​தினர். கொடிக்​கம்​பத்தை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தும்​படி அறி​வுறுத்​தினர். இதையடுத்து கொடிக்​கம்​பம் அகற்​றப்​பட்​டது. இன்று மாநாடு நடை​பெற உள்ள நிலை​யில், வேறொரு கொடிக் கம்​பத்தை அமைப்​பது தொடர்​பாக கட்சி நிர்​வாகி​கள் ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “மா​நாடு முடிவடைந்த பிறகும், அதே இடத்​தில் 100 அடி கொடிக் கம்​பத்​தில் கட்​சிக் கொடியை 5 ஆண்​டு​களுக்கு பறக்​க​விட நிர்​வாகி​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதற்​காக அந்த நிலத்​தின்உரிமை​யாளரிடம் ஒப்​பந்​தம் மேற்​கொள்ள முயற்​சித்​துள்​ளனர். இதில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

கடந்த 2 நாட்​களுக்கு முன்பு உடன்​ பாடு ஏற்​பட்​டதைத் தொடர்ந்து அவசர அவசர​மாக கொடிக் கம்​பத்தை அமைக்​கும் பணியை மேற்​கொண்​டுள்​ளனர். அதிக எடை தாங்​காமல் கம்​பம் சரிந்து விழுந்​த​தாகத் தெரி​கிறது. தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கிறோம்’ என்று கூறினர்.

தொண்டர்கள் குவிந்தனர்: இதற்கிடையே, மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மாநாடு பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்கி இரவு 8 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் கட்சிக் கொடி ஏற்றுதல், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றுதல், விஜய் உரை, நன்றியுரை என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

விஜய் மதுரை வருகை: மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய், மதுரைக்கு நேற்று மாலை காரில் வந்தார். பின்னர் ஓட்டலில் தங்கிய அவர், கட்சி நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்தினார்.

பிளக்ஸ் பேனர் வைத்த கல்​லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயி​ரிழப்பு: விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிபுத்​தூர் அருகே இனாம் கரிசல்​குளத்​தைச் சேர்ந்​தவர் காளியப்​பன் மகன் காளீஸ்​வரன் (19). இவர், ஸ்ரீவில்​லிபுத்​தூர் அருகே கிருஷ்ணன்​ கோ​விலில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் விஸ்​காம் 3-ம் ஆண்டு படித்து வந்​தார்.

விஜய் ரசிக​ரான காளீஸ்​வரன், மாநில மாநாட்​டுக்​கான பிளக்ஸ் பேனர் வைக்க தனது நண்​பருடன் சேர்ந்து இரும்பு கம்பி எடுக்​கச் சென்​றுள்​ளார். நேற்று முன்​தினம் இரவு பேருந்து நிறுத்​தம் அருகே உள்ள கடை​யில் இருந்து இரும்​புக் கம்​பியை எடுத்து வந்​த​போது, உயர் அழுத்த மின் கம்​பி​யில் இரும்​புக் கம்பி உரசி​ய​தில் மின்​சா​ரம் பாய்ந்து காளீஸ்​வரன் தூக்கி வீசப்​பட்​டார்.

அங்​கிருந்​தவர்​கள் அவரை மீட்டு ஸ்ரீவில்​லிபுத்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், காளீஸ்​வரன் ஏற்​கெனவே உயி​ரிழந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்து வன்​னி​யம்பட்​டி போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in