தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை!

தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை!
Updated on
1 min read

விழுப்புரம்: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அன்புமணி குறித்து முக்கிய முடிவை நிறுவனர் ராமதாஸ் எடுக்கக் கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இந்நிலையில் ராமதாஸின் மனைவியும், அன்புமணியின் தாயாருமான சரஸ்வதி அம்மையாரின் பிறந்த தினம் நேற்று என்பதால், அவருக்கு ராமதாஸ் மற்றும் அவரது மகள்களின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி நேற்றிரவு தைலாபுரத்திற்குச் சென்றார். அப்போது அவர் தனது தாயை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றார். தாயும் மகனும் சந்தித்த நிலையில் ராமதாஸும் அதே இல்லத்தில் தான் இருந்தார். இவர்கள் இருவரும் பேசினார்களா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தைலாபுரத்திற்கு அன்புமணி சென்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற் படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in