சொத்துக் குவிப்பு மறுவிசாரணை ரத்து கோரிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

சொத்துக் குவிப்பு மறுவிசாரணை ரத்து கோரிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: தனக்கு எதி​ரான சொத்து குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணையை ரத்து செய்​யக்​கோரி அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

கடந்த 1996- 2001 மற்​றும் 2006 - 2011 திமுக ஆட்​சிக் காலங்​களில் தமிழக அமைச்​ச​ராக பதவி வகித்த எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர்.

அமைச்​சர், அவரது மனைவி மற்​றும் மகன் மீதான இந்த வழக்கை விசா​ரித்த கடலூர் நீதி​மன்​றம், அவர்​களை வழக்​கில் இருந்து விடுவித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்​புத் துறை தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்யப்பட்​டது.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சொத்​துக் குவிப்பு வழக்​கில் இருந்து அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை விடு​வித்து கடலூர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்தது.

மேலும், அமைச்​சர் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக குற்​றச்​சாட்​டுக்​களை பதிவு செய்து ஆறு மாதங்​களில் வழக்​கின் மறு​வி​சா​ரணையை முடிக்க, கடலூர் சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து எம்​.ஆர்​.கே. பன்​னீர்​செல்​வம் சார்​பில் தாக்​கல் செய்​யப்பட்ட மேல் முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை உச்சநீதிமன்ற நீதிப​தி​கள் சூர்​யகாந்த், ஜோய்​மால்யா பக் ஷி அடங்​கிய அமர்​வில் நேற்று நடை​பெற்​றது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கின் அனைத்து அம்​சங்​களை​யும் உயர் நீதி​மன்​றம் கருத்​தில் கொள்​ள​வில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், மனுவை திரும்​பப்​பெற அனு​ம​தி​யளித்து தள்​ளு​படி செய்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in