சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவள்ளூர் நீதிமன்றம்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவள்ளூர் நீதிமன்றம்
Updated on
1 min read

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வாலங்​காடு அடுத்த களாம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவ​காரத்​தில் தனுஷின் 17 வயது தம்​பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்​ளிர​வில் கடத்​தப்​பட்​டார்.

இச்​சம்​பவம் தொடர்​பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீ​யின் தந்தை வனராஜா, உறவினர்​கள் கணேசன், மணி​கண்​டன் ஆகியோர், திரு​வள்​ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம், சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்​கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்​கள் தள்​ளு​படி​யானது. இந்​நிலை​யில், 4-வது முறை​யாக வனராஜா, கணேசன், மணி​கண்​டன் ஆகிய 3 பேரும் திருவள்ளூர் நீதித்​துறை நடு​வர் -1 நீதி​மன்​றத்​தில் ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தனர். அந்த மனுவை விசா​ரித்த, நீதித்​துறை நடு​வர் -1 நீதி​மன்​றம் வனராஜா உள்​ளிட்ட 3 பேருக்​கும் நேற்​று​முன்​தினம் ஜாமீன் வழங்கி உத்தர​விட்​டுள்​ளது.

14-ம் தேதி விசா​ரணை: மேலும், இந்த வழக்​கில் சிறை​யில் உள்​ளோரில், பணிநீக்​கம் செய்​யப்​பட்ட காவலர் மகேஸ்​வரி, வழக்கறிஞர் சரத்​கு​மார் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்​கல் செய்​துள்ள மனு, வரும் 14-ம் தேதி சென்னை உயர்​நீ​தி​மன்றத்​தில் விசாரணைக்கு வர உள்​ளது..

அது​மட்​டுமல்​லாமல், சிறு​வன் கடத்​தல் தொடர்​பாக குற்​றம்​சாட்​டப்​பட்ட புரட்சி பாரதம் கட்சி தலை​வரும், கே.​வி.குப்​பம் தொகுதி எம்​.எல்​.ஏ.வு​மான பூவை ஜெகன் மூர்த்​தி, ஏடிஜிபி ஜெய​ராம் ஆகிய இரு​வரில், பூவை ஜெகன் மூர்த்​திக்கு முன்​ஜாமீன் வழங்​கி​யும், ஏடிஜிபி ஜெய​ராம் மீதான கைது உத்​தரவை ரத்து செய்​தும் ஏற்​க​னவே உச்​சநீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in