Published : 24 Jul 2018 08:00 AM
Last Updated : 24 Jul 2018 08:00 AM

இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம்: முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்

முதல்வர் கே.பழனிசாமி தலைமை யில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத் தில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டது.

தமிழகத்தில் பெருவெள்ளம், சுனாமி, புயல் போன்ற பேரிடர் களால் உயிர்ப் பலி ஏற்படுவதுடன் பெரும் கட்டமைப்புகளும் சேத மடைகின்றன. இதை கருத் தில் கொண்டு, தமிழக பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிப் பதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட் டம், சென்னை தலைமைச் செய லகத்தில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீ்ர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழ கன், கே.சி.கருப்பணன், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலர்கள் நிரஞ்சன்மார்டி, முகமது நசிமுதீன், எஸ்.கிருஷ் ணன், கே.கோபால், அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் விளக்கினார். தொடர்ந்து அமைச்சர் கள், அதிகாரிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி விரிவாக ஆலோசித் தார். கூட்டத்தின் முடிவில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 - 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர் துயர் துடைப்புக்காக 4 இலக்குகள், 7 பரிந்துரைகளுடன் சென்டாய் கட் டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கட்டமைப்பு அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் உரு வாகியுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள்- 2030, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடும் முன்னுரிமை மற்றும் இலக்குகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இது தவிர தேசிய பேரிடர் லேமாண்மைத் திட்டம் 2016, பேரிடர் அபாய தணிப்பு குறித்து ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட 10 அம்ச செயல் திட்டம் ஆகியவற்றை ஒட்டியும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், தமிழகம் பற் றிய குறிப்பு, பேரிடர்களால் ஏற் படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடு, அதன் தணிப்புக்கான இயற் கையை ஒட்டிய முறையான அணுகுமுறைகள், நிர்வாக கட்ட மைப்பு, பேரிடர்களை எதிர்கொள் வதற்கான தயார் நிலை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இவை தவிர, பேரிடர்களின் போது இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு, அபாயங்களை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பாதிப்புகளை சீரமைக்கும்போது மீண்டும் சிறப்பாக உருவாக்குதல், மாநிலத் தின் இதர வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல், அத்திட்டங்களை நெறிப்படுத்துதல், நிதி ஆதாரங்கள், தொலைநோக்குத் திட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய திட்டமாக இது தயார் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருவாய் நிர் வாக ஆணையர் கே.சத்யகோபா லிடம் கேட்டபோது,‘‘ தமிழகத் துக்கு நீண்டகால தேவையின் அடிப்படையில் இந்த தொலை நோக்குத் திட்டத்தை தயாரித்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x