கொடிக் கம்பம் வழக்கில் அதிமுக, மதிமுக இடையீட்டு மனு

கொடிக் கம்பம் வழக்கில் அதிமுக, மதிமுக இடையீட்டு மனு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் இணைய விரும்​பும் கட்​சிகள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​ய​லாம் என மதுரை உயர்​நீ​தி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, இந்​திய கம்​யூனிஸ்ட், தவெக, விசிக சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. தொடர்ந்​து, அதி​முக, மதி​முக சார்​பிலும் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

அதி​முக சார்​பில் சட்​டப்​பேரவை எதிர்க்​கட்சி துணைத் தலை​வர் ஆர்​.பி. உதயகு​மார் மற்றும் மதி​முக சார்பில் பொதுச் செய​லா​ளர் வைகோ ஆகியோர் இடையீட்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைடெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in