613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்: சேர்க்கை ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னையில் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் மாணவர் ஒருவருக்கு சேர்க்கை ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னையில் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் மாணவர் ஒருவருக்கு சேர்க்கை ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
Updated on
1 min read

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்​ளன.

இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 494 எம்​பிபிஎஸ் இடங்​கள், 119 பிடிஎஸ் இடங்​கள் வழங்​கப்படுகின்​றன. இந்​நிலை​யில், சிறப்பு பிரிவு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்​தாய்வு மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நேற்று சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடந்​தது.

இதில் தேர்​வான மாணவ, மாணவி​களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்கினார். இதன்​படி 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் விவ​சா​யி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்​பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்​கள் மருத்​துவ படிப்​பில் சேர்ந்​துள்​ளனர்.

இந்​நிகழ்​வில் சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், தமிழ்​நாடு அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் மணி உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். இதே​போல் முதல் சுற்று பொது கலந்​தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் நேற்று காலை காலை 10 மணிக்கு தொடங்​கியது.

ஆக.5-ம் தேதி தரவரிசை பட்​டியல் அடிப்​படை​யில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட​வுள்​ளது. இடஒதுக்​கீடு விவரங்​கள் ஆக.6-ம் தேதி வெளி​யாகும். ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்​குள் இடஒதுக்​கீடு பெற்​ற கல்​லூரி​களில்​ சேர வேண்​டும்​.

மருத்துவராகும் 49 வயது பெண்: தென்​காசி மாவட்​டத்தை சேர்ந்த பிசி​யோதெரபிஸ்ட் அமுதவல்லி (49). இவரது மகள் சம்​யுக்தா கிரு​பாலனி. நீட் தேர்​வுக்கு சம்​யுக்தா தயா​ராகி வந்த நிலை​யில், மகளின் வழி​காட்​டு​தலின்​படி, மாற்​றுத் திற​னாளி தாயா​ரான அமுதவல்​லி​யும் நீட் தேர்​வு எழுதி 147 மதிப்​பெண் பெற்றார். மகள் 450 மதிப்​பெண்​களும் பெற்​றார்.

இரு​வரும் எம்​பிபிஎஸ் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தனர். அமுதவல்லி மாற்​றுத்​திற​னாளி என்​ப​தால், சிறப்பு பிரிவு கலந்​தாய்​வில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் இடம் கிடைத்​துள்​ளது. மகள் சம்​யுக்தா ஆன்​லைனில் நடை​பெறும் பொது பிரிவு கலந்​தாய்​வில் பங்​கேற்​கிறார். அவருக்​கும் இடம் கிடைக்க வாய்ப்​புள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in