அமெரிக்காவில் சிகிச்சை: இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு

அசோக்​கு​மார்
அசோக்​கு​மார்
Updated on
1 min read

சென்னை: அமெரிக்​கா​வில் சிகிச்சை மேற்​கொள்​வதற்​கான இந்​திய மருத்​து​வர் அளிக்​கும் பரிந்​துரை கடிதத்தை தாக்​கல் செய்ய, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாருக்​கு, சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதய சிகிச்சை மேற்​கொள்ள அமெரிக்கா செல்ல அனு​மதி கோரி, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார் தாக்​கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​திருந்​தது.

இந்த உத்​தரவை எதிர்த்​து, அசோக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மனு, நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அவகாசம் கேட்பு: அப்​போது, அமலாக்​கத்​துறை தரப்​பில், “வி​சா​ரணை அதி​காரி பலமுறை அழைப்​பாணை அனுப்​பி​யும், விசாரணைக்கு ஒரு முறை கூட அசோக்​கு​மார் ஆஜராக​வில்​லை. அவர் அமெரிக்க செல்ல அனு​ம​திக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்​டது.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், “அமெரிக்​கா​வில் சிகிச்சை பெறு​வதற்கு இந்​திய மருத்​து​வரின் பரிந்​துரையை பெற வேண்​டியது அவசி​யம். அவ்​வாறு மருத்​து​வர் பரிந்​துரைத்​தது தொடர்​பான ஆவணங்​களை இது​வரை நீதி​மன்​றத்​தில் அசோக்​கு​மார் ஏன் தாக்​கல் செய்​ய​வில்​லை” என கேள்வி எழுப்​பினர்.

இது தொடர்​பாக, அசோக் குமார் தரப்​பில் பதில் அளிக்ககால அவகாசம் கேட்​கப்​பட்​டது. இதையடுத்​து, நீதிப​தி​கள், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்​கொள்ள தேவை​யான இந்​திய மருத்​து​வரின் பரிந்​துரை கடிதத்தை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய அசோக் குமாருக்கு உத்​தர​விட்டு வழக்​கின் வி​சா​ரணையை ஆக.5-ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in