கங்​கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை

கங்​கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை
Updated on
1 min read

அரியலூர்: கங்​கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் கட்​டத் தொடங்கிய ஆயிர​மாவது ஆண்டு விழா, தென்​கிழக்கு ஆசிய நாடு​களின் மீது படையெடுத்​துச் சென்ற ஆயிர​மாவது ஆண்டு நிறைவு விழா என முப்​பெரும் விழா நடை​பெற்று வரு​கிறது.

இன்று நடை​பெறும் நிறைவு விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்றுள்ளார். இதற்​காக ராணுவ ஹெலி​காப்​டர் மூலம் பொன்​னேரி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேடுக்கு அவர் வருகை தந்தார். அங்​கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலுக்கு வந்தார். வரும் வழியில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

பிரகதீஸ்​வரர் கோயி​லில் வருகை தந்த பிரதமர், அங்​குள்ள சிற்​பங்​கள், கலாச்​சா​ரத் துறை சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள புகைப்பட கண்​காட்​சி​யைப் பார்வையிட்டார். அங்கு கல்வெட்டுகள் குறித்து ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமருக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in