தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளது: பிரதமர் மோடி தகவல்

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற விழாவில் விரிவாக்கப்பட்ட விமான நிலையம் உட்பட ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு. படம்: மு.லெட்சுமி அருண்
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற விழாவில் விரிவாக்கப்பட்ட விமான நிலையம் உட்பட ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தூத்துக்குடி: தமிழகத்​துக்கு கடந்த 10 ஆண்​டு​களில் மத்​திய அரசு ரூ.3 லட்​சம் கோடியை அளித்​துள்​ள​தாக​வும், இது கடந்த காங்​கிரஸ் ஆட்​சி​யில் அளிக்​கப்​பட்ட தொகை​யை​விட 3 மடங்கு அதி​க​மாகும் என்​றும் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​னார்.

விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து​வைத்​தும், தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் வடக்கு முனை​யம்-3 உட்​பட, தமிழகத்​தில் மத்​திய அரசு செயல்​படுத்​தி​யுள்ள ரூ.4,900 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தும் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

மேக் இன் இந்​தியா திட்​டத்​தால் இந்​தியா பெரிய வளர்ச்​சியை அடைந்து வரு​கிறது. தமிழகத்தின் ஆற்​றல் வளத்தை மேம்​படுத்த, தூத்​துக்​குடி துறை​முக கட்​டமைப்பை உயர்​தொழில்​நுட்​பத்​துடன் வளர்த்​துக் கொண்​டிருக்​கிறோம். இங்கு ரூ.450 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள விமான​முனை​யம், ஆண்​டு​தோறும் 20 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பயணி​களைக் கையாளும்.

3 மடங்கு அதிகம்... தமிழகத்​தில் ரூ.2,500 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள சாலை திட்​டங்​களால் வர்த்​தகம், வேலை​வாய்ப்​புக்​கான பாதைகள் திறக்​கும். கடந்த 11 ஆண்​டு​களில் ரயில்வே நவீனமய​மாக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தி​லும் ரயில்வே வளர்ச்சி திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 77 ரயில் நிலை​யங்​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தின் வளர்ச்​சி, மேம்​பட்ட தமிழகம் என்ற கனவு நமது முக்​கிய​மான உறு​திப்​பா​டாகும். தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு நாம் முக்​கி​யத்​து​வம் அளித்து வந்​துள்​ளோம். கடந்த 10 ஆண்​டு​களில் மத்​திய அரசு தமிழகத்​துக்கு ரூ.3 லட்​சம் கோடியை அளித்​திருக்​கிறது. இந்த தொகை கடந்த காங்​கிரஸ் அரசு அளித்த தொகைையை​விட 3 மடங்கு அதி​க​மாகும்.

கடந்த 11 ஆண்​டு​களில் 11 புதிய மருத்​து​வக் கல்​லூரி​கள் தமிழகத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. முதன்​முறை​யாக கரையோர மீன்​பிடித் துறை​முகங்​களுக்கு இத்​தனை கரிசனத்​தை​யும், அக்​கறையை​யும் இதற்கு முன்பு யாரும் வெளிப்​படுத்​த​வில்​லை. தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு நாங்​கள் முன்​னுரிமை கொடுக்​கிறோம். அதனுடன் தொடர்​புடைய கொள்​கைகளுக்​கும் முன்​னுரிமை அளித்து வரு​கிறோம். இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

விழா​வில், தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய அமைச்​சர்​கள் கிஞ்​ச​ராபு ராம்​மோகன் நாயுடு, எல்​.​முரு​கன், தமிழக அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, டி.ஆர்​.பி.​ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்​துக்​குடி எம்​.பி. கனி​மொழி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்​ எம்​எல்​ஏ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in