“இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும், பெரியார் புராணம் அல்ல” - தமிழிசை 

“இங்கு பெரியபுராணம்தான் அதிகம் பேசப்பட வேண்டும், பெரியார் புராணம் அல்ல” - தமிழிசை 
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் பிரி​வினை பேசும் பல குரல்​கள் எழுகின்​றன. இது கண்​டிக்​கத்​தக்​கது. இங்கு பெரியபு​ராணம்​தான் அதி​கம் பேசப்பட வேண்​டும். பெரி​யார்புராணம் அல்ல என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை ​தெரிவித்துள்ளார்.

தூத்​துக்​குடிக்கு புறப்​படும் முன்​பாக சென்னை விமான நிலை​யத்​தில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று கூறிய​தாவது: நாட்​டின் ஒற்​றுமைக்கு மிக பெரிய பாதகம் ஏற்​படுத்​தும் அளவுக்​கு, தமிழகத்​தில் பிரி​வினை பேசும் பல குரல்​கள் எழுகின்​றன. இது கண்​டிக்​கத்​தக்​கது. இங்கு பெரியபு​ராணம்​தான் அதி​கம் பேசப்பட வேண்​டும். பெரி​யார்புராணம் அல்ல. நமது சோழ மன்​னர்​கள் ஆன்​மிகத்​தோடு​தான் படை பலத்தை வளர்த்​தனர். காவி தமிழ்​தான் இங்கு அதி​கம் வளர்க்​கப்​பட்​டது.

தமிழகம் பற்றி முதல்​வர் ஸ்டா​லின் சிந்​திப்​ப​தை​விட, பிரதமர் மோடி அதி​கம் சிந்​திக்​கிறார். ‘வீடு வீடாக சென்​று, பாஜக நிதி தரவில்லை என்​பதை கூறுங்​கள்’ என்​றார் ஸ்டா​லின். அதே​போல, பிரதமர் மோடி இப்​போது ரூ.4,300 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார் என்​ப​தை​யும் வீடு வீடாக சென்று கூறுங்​கள்.

செந்​தில் பாலாஜி​யின் தம்​பி, வெளி​நாடு சென்று மருத்​துவ சிகிச்சை பெறுகிறார். வேறு பல அரசி​யல்​வா​தி​களும் சிகிச்​சைக்​காக வெளி​நாட்​டுக்​கோ, தனி​யார் மருத்​து​வ​மனை​களுக்கோ செல்​கின்​றனர். ஆனால், பிரதமர் மோடி, அரசு மருத்​து​வ​மனைக்கு சென்று தடுப்​பூசி போட்​டுக் கொண்​டார். அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களுக்கு வரு​வோர் அனை​வருக்​கும் ஒரே​மா​திரி​யான சிகிச்சை கிடைக்க வேண்​டும் என்​பது​தான் அரசாங்​கத்​தின் நோக்​க​மாக இருக்க வேண்​டும்.

‘கிட்னி திருட்டு எது​வும் நடக்​க​வில்​லை. அது முறை​கேடு’ என்​கிறார் சுகா​தார துறை அமைச்​சர். வீடு புகுந்து பொருட்​களை திருடி செல்​வது திருட்​டா, முறை​கே​டா? பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு சீர்​திருத்​தம் நடை​பெறுகிறது. வாக்​காளர் பட்​டியலில் இருந்து இறந்​தவர்​களின் பெயர்​கள்​தான் நீக்​கப்​படு​கின்​றன. இதற்கு திமுக ஏன் பதற வேண்​டும். தமிழகத்​தி​லும் தவறான பெயர்​கள் நீக்​கப்​பட்​டு, முறை​யான வாக்​காளர் பட்​டியல்​ உரு​வாக்​கப்​பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in