தமிழகத்​தின் வளர்ச்​சி திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமரிடம் தங்கம் தென்னரசு வழங்குவார்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய மனு குறித்து அதிகாரிகளுடன் அலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின். உடன் கனிமொழி எம்.பி.
பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய மனு குறித்து அதிகாரிகளுடன் அலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின். உடன் கனிமொழி எம்.பி.
Updated on
1 min read

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்க உள்​ளார்.

கடந்த ஜூலை 21-ம் தேதி முதல்​வர் ஸ்​டா​லினுக்கு நடைப​யிற்​சி​யின் போது தலைசுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவரை 3 நாட்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். இதையடுத்​து, தொடர் சிகிச்​சை​யில் மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் இருந்து வரு​கிறார். இருப்​பினும், அரசு மற்​றும் கட்சி தொடர்பான ஆலோ​சனை​களை தொடர்ந்து மருத்​து​வ​மனை​யில் இருந்தே மேற்கொண்டு வரு​கிறார். முதல்வரை, குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், தலை​மைச்​செயலர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தொடர்ந்து சந்​தித்து பேசி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க தமிழகம் வந்​துள்​ளார். முதல்​வர் அவரை சந்​திக்க இயலாத நிலை​யில், தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில், நேற்று தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் முதல்​வரை சந்​தித்து பேசி​னார்.

தொடர்ந்​து, தயாரிக்​கப்​பட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை முதல்​வரிடம் அதி​காரி​கள் அளித்து அவரின் ஒப்​புதலை பெற்​றனர். இந்த சந்​திப்​பின் போது, கனி​மொழிஎம்​.பி.​யும் உடன் இருந்​தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு அளிக்க உள்​ளார். இதுகுறித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘மருத்​து​வ​மனை​யில் இருப்​ப​தால் தமிழகத்​துக்கு வரும் பிரதமர் மோடி​யிடம் வழங்க உள்ள கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை தலை​மைச்​செயலர் மூலம் கொடுத்​தனுப்​பி​யுள்​ளேன். நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு பிரதமரிடம் வழங்​கு​வார்’’ என தெரி​வித்​துள்​ளார்​.

திமுகவினருடன் ஆலோ​சனை: இதனிடையே நேற்று சட்​டப்​பேரவை தேர்​தல் தொடர்​பாக, மண்டல பொறுப்​பாளர்​கள், திமுக நிர்​வாகி​களை நேரில் சந்​தித்து ஓரணி​யில் தமிழ்​நாடு மற்​றும்தேர்​தல் களப்​பணி​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். இந்த சந்​திப்​பின்​போது, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், ஆ.ராசா எம்​.பி.,ஆர்​.எஸ்​.​பாரதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். அப்​போது முதல்​வர் ஸ்டா​லின், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்​பில் அதி​க​மான மக்​களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வரு​வதாகவும் அதற்கு காரண​மான நிர்​வாகி​களுக்கு பாராட்டும் தெரி​வித்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in