கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா? - பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா? - பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்
Updated on
1 min read

சென்னை: ‘கோ​யில் நிலத்தை ஆக்​கிரமித்து குடி​யிருந்து வருபவர்​களுக்​கு, அங்​கேயே வீடு கட்டி கொடுப்​போம் என சொல்​வ​தா?’ என்று பழனி சாமிக்கு இந்து முன்​னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்​டம் ஒரத்​த​நாட்​டில் சுற்​றுப்​பயணம் செய்த முன்​னாள் முதல்​வர் பழனிசாமி, கோயில் நிலத்​தில் குடி​யிருப்​போருக்கு கோயில் நிலம் சொந்​த​மாக்​கப்​படும் என்​றும், தங்​களு​டைய அரசு அமைந்​தால் அரசு சார்​பில் வீடு கட்டித்தரப்படும் என்​றும் சொல்​லி​யிருப்​பது உண்​மை​யிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்​கிறது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலை​யத்​துறைக்கு உட்​பட்ட 40,000-க்​கும் மேற்​பட்ட கோயில்​களுக்​குச் சொந்​த​மாக பல லட்​சம் ஏக்கர் நிலங்​கள் உள்​ளன. இந்த நிலங்​களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திரா​விட அரசாங்​கங்​கள் கொடுத்தது அல்ல.

அந்​தக்​ காலத்​தில் அரசர்​களும், ஆன்​மீகப் பெரியோர்​களும் கோயில்​களுக்கு ஆறு கால பூஜை நடக்​க​வும், கோயில்​களின் அன்றாட செல​வு​களுக்​காக​வும் அந்​தக் கோயில் நிலங்​களில் இருந்து வரு​கின்ற வரு​மானத்​தின்மூல​மாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்​களை எழுதி வைத்​தனர்.

தற்​போது பல்​லா​யிரக்​கணக்​கான ஏக்​கர் நிலங்​கள் ஆக்​கிரமிப்​பாளர் பிடி​யில் உள்​ளது. நீதி​மன்​றங்​கள் பலமுறை தலை​யிட்டு இதைப் பற்றி பேசி​யும் எந்த ஒரு அரசாங்​க​மும் கோயில் நிலங்​களை மீட்க சரி​யான நடவடிக்கை இது​வரை எடுக்​க​வில்​லை. இந்நிலையியில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தான் ஆட்​சிக்கு வந்தபிறகு கோயில் நிலங்​களில் குடி​யிருப்​போருக்கு கோயில் நிலத்தை சொந்​த​மாக்கி அதில் வீடும் கட்​டித் தரப்​படும் என்று சொல்​வது வெந்த புண்​ணில் வேலைப் பாய்ச்​சுவது போல் உள்​ளது.

ஏற்​கெனவே சிறு​பான்​மை​யினரை தாஜா செய்​யும் நோக்​கத்​தில் வக்பு வாரியச் சட்​டத்தை தீவிர​மாக எதிர்த்​தவர் பழனிசாமி. தற்போது தமிழகத்​தில் பல கோயில்​களும் கோயில் நிலங்​களும் வக்பு போர்​டுக்​குச் சொந்​த​மானது என சொல்லி ஆக்​கிரமிக்க முயலும் சிறு​பான்​மை​யினருக்கு இது ஆதர​வாக அமை​யா​தா? கோயில் நிலத்தை ஆக்​கிரமிப்பு செய்​தவர்​களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்​டித் தரப்​படும் என்று சொல்​லும் பழனி​சாமி, வக்பு நிலங்​களி​லும், கிறிஸ்​தவ நிறுவனங்களுக்​குச் சொந்​த​மான லட்​சக்​கணக்​கான நிலங்​களி​லும் ஏழை, எளிய மக்​களுக்கு வீடு கட்​டிக் கொடுப்​போம் என்று சொல்ல முடி​யு​மா? ஆகவே பழனிசாமி சொல்​லி​யிருப்​பதை இந்து முன்​னணி வன்​மை​யாக கண்​டிக்​கிறது. உடனடி​யாக அவரது கருத்தை திரும்​பப்​ பெற வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in