சென்னை மாநகராட்சி சார்பில் 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டிட கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி சார்பில் 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டிட கழிவுகள் அகற்றம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில் கடந்த 6 மாதங்​களில் 2 லட்​சம் டன் கட்​டிடம் மற்​றும் இடி​பாட்​டுக் கழி​வு​கள் அகற்றப்பட்டுள்​ளன.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 15 மண்​டலங்​களில் கட்​டிட மற்​றும் இடி​பாட்​டுக் கழி​வு​கள் பிரிமீயர் பிரெசிசன் சர்ஃபேஸ் நிறு​வனம் மூலம் அகற்​றப்​பட்டு வருகின்றன.

மாநக​ராட்​சிப் பகு​தி​களில் உள்ள அனைத்து மண்​டலங்​களி​லும் கட்​டிடக் கழி​வு​கள் சீராக அகற்​றப்​ப​டா​மல் போக்​கு​வரத்​துக்கு இடையூறு, சுகா​தார சீர்​கேடு, விபத்​துகள் ஏற்​படு​தல், வளர்ச்​சிப் பணி​களில் தடங்​கல் உள்​ளிட்ட பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன. இந்​நிலையில் இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் உரிய தீர்​வு​கண்டு அதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் செம்​மைப் படுத்​தப்​பட்​டு, கடந்த ஜன.7-ம் தேதி 7 மண்​டலங்​களில் தீவிர கட்​டிடக் கழி​வு​கள் அகற்​றும் பணியை மேயர் ஆர்​.பிரியா தொடங்​கி​வைத்​தார்.

அதனைத் தொடர்ந்​து, ஜன.17-ம் தேதி இதர 8 மண்​டலங்​களி​லும் தீவிர கட்​டிடக் கழி​வு​கள் அகற்​றும் பணி தொடங்​கப்​பட்​டது. இப்பணி​களுக்​காக 15 மண்​டலங்​களி​லும் 168 வாக​னங்​களைப் பயன்​படுத்தி சராசரி​யாக நாளொன்​றுக்கு 1000 டன் கட்டிடக் கழிவுகள் அகற்​றப்​படு​கின்​றன.

கடந்த ஜன.7 முதல் ஜூலை 22-ம் தேதி வரையி​லான 6 மாதங்​களில் 2 லட்​சம் டன் கட்​டிட மற்​றும் இடி​பாட்​டுக் கழி​வு​கள் அகற்​றப்​பட்​டுள்ளன. அவை கொடுங்​கையூர் மற்​றும் பெருங்​குடி​யில் உள்ள கட்​டிடக் கழி​வு​கள் பிரித்​தெடுக்​கும் மையங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்டு தனித்​தனி​யாக பிரித்து மறுசுழற்சி பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

கட்​டிடக் கழி​வு​களை அகற்​று​வது தொடர்​பாக பொது​மக்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் கடந்த ஏப்​.21-ம் தேதி முதல் மாநகராட்சி பகு​தி​யில் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அலு​வலர்​களுக்கு பயிற்​சி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக மக்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. வழி​காட்​டு​தல் நெறிமுறை​களை பின்​பற்​றாதவர்​களிட​மிருந்து ஜனவரி முதல் ஜூலை 22-ம் தேதி வரை ரூ.39.30 லட்​சம் அபராத​மாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in