குரூப்-4 தேர்வு விடைத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டன: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

குரூப்-4 தேர்வு விடைத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டன: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
Updated on
1 min read

சென்னை: குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்​களி​லிருந்​தும் விடைத்​தாள் கட்​டு​கள் ஜூலை 14-ம் தேதியே பாதுகாப்புடன் சென்​னைக்கு கொண்​டு​வரப்​பட்​டு​விட்​டன. எந்த மையத்​தி​லும் பிரச்​சினை ஏற்​பட​வில்லை என டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் மற்​றும் கிராம நிர்​வாக அலுவலர் உள்​ளிட்ட பதவி​களில் 3,935 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி (சனிக்கிழமை) நடத்​தப்​பட்​டது. தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​திய இத்​தேர்வை 11 லட்​சத்து 48 ஆயிரம் பேர் எழு​தி​யுள்​ளனர்.

இந்த சூழலில் சேலம் மாவட்​டத்​தில் தேர்வு மையம் ஒன்​றில் குரூப்-4 விடைத்​தாள் கட்​டு​கள் வைக்​கப்​பட்ட பெட்டி ஆங்​காங்கே உடைக்​கப்​பட்​டிருந்த நிலை​யில் இருந்​த​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இது தொடர்​பான புகைப்​படங்​களும் சமூகவலை​தளங்​களில் வெளி​யான​தால் தேர்​வெழு​தி​ய​வர்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஏ.சண்​முகசுந்​தரம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜூலை 12-ம் தேதி குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து விடைத்​தாள்​களும் உரிய பாது​காப்பு நடை​முறை​களை பின்​பற்றி சீலிடப்பட்ட இரும்பு பெட்​டிகளில் டிஎன்​பிஎஸ்சி அலு​வல​கத்​துக்கு 13-ம் தேதி காலை பாது​காப்​பாக வரப்​பெற்​றன. இதில் எந்தவிதமான குளறு​படிகளும் நடக்​க​வில்​லை.

விடைத்​தாள்​கள் அட்டை பெட்​டிகளில் கொண்​டு​வரப்​பட்டன என்ற செய்தி உண்மை அல்ல. விடைத்​தாள்​கள் அனைத்​தும் இரும்பு பெட்​டிகளில் வைத்து சீலிடப்​பட்டு அவை டிஎன்​பிஎஸ்சி அலு​வல​கம் வந்​துசேரும் வரை 24 மணி நேர​மும் நேரடி​யாக கண்​காணிக்கப்​பட்டு அவற்​றின் பாது​காப்பு உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இவை முழு​வதும் வீடியோ பதிவு செய்​யப்​பட்டு கண்​காணிப்பு கேமரா மூல​மாக​வும் கண்​காணிக்​கப்​படு​கிறது.

செய்​தி​களில் கொடுக்​கப்​பட்ட புகைப்​படங்​கள், பயன்​படுத்​தப்​பட்ட காலி அட்​டைப்​பெட்​டிகள் மற்​றும் தேர்​வுக்கு பயன்படுத்தப்பட்ட பின்​னர் உபரி​யாக இருந்த வினாத்​தாள்​கள் அடங்​கிய அட்டை பெட்​டிகள் போன்​றவை ஆகும். இவை தேர்​வில் பயன்​பட்​டது போகமீதமுள்ள வினாத்​தாள்​கள் என்​ப​தால் வழக்​க​மான நடை​முறை​யின்​படி அந்​தந்த மாவட்​டங்​களி​லேயே வைக்கப்​பட்​டிருக்​கும்.

தேர்வு நடை​முறை​கள் முடிந்த பின்​னர் அவை மாவட்ட கரு​வூல​கங்​கள் மூல​மாக மாவட்ட மைய நூல​கங்​கள் மற்​றும் மாவட்ட வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​படு​வது வழக்​கம். ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​ட​வாறு குருப்-4 தேர்வு முடிவுகள் 3 மாதத்​தில் வெளி​யிடப்படும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in