நிலுவை வழக்குகளை குறைக்க மாநில சமரச தீர்வு மையம் சார்பில் பிரச்சார விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு சமரச தீர்வு மையம் சார்பில், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ‘தேசத்துக்கான சமரச பிரச்சார விழிப்புணர்வு பேரணி’ சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சமரச தீர்வு மையம் சார்பில், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ‘தேசத்துக்கான சமரச பிரச்சார விழிப்புணர்வு பேரணி’ சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
Updated on
1 min read

சென்னை: நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்​கும் வகை​யில், மாநில சமரச தீர்வு மையம் சார்​பில் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பிரச்​சார விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு சமரச தீர்வு மையம் செயல்​படு​கிறது.

உயர் நீதி​மன்​றம் மற்​றும் கீழமை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை வீண் தாமதம், வீண் செல​வுகள் இல்​லாமல் சுமுக​மாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதன் செயல்​பாடு​கள் குறித்து மக்​கள் அறிந்​து​கொள்​ளும் வகை​யில், விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் உச்ச நீதி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் ஆகியோர் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

அதன்​படி, சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள மாநில சமரச தீர்வு மையத்​தில் தேசத்​துக்​கான சமரச விழிப்​புணர்வு பிரச்​சார பேரணி நேற்று நடத்​தப்​பட்​டது. தீர்வு மையத்​தின் இயக்​குநர் பாலசுப்​பிரமணி​யன் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

அவர் கூறும்​போது, “மாநிலம் முழு​வதும் இந்த சமரச விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் 90 நாட்​கள் நடை​பெற உள்​ளது. விவாகரத்து போன்ற திருமண பிரச்​சினை​கள், குடும்ப வன்​முறை, விபத்து இழப்​பீடு, காசோலை மோசடி போன்ற வழக்​கு​களுக்கு சமரச முறை​யில் தீர்வு காணப்​படும்.

தாலுகா மற்​றும் மாவட்ட சட்​டப் பணி​கள் மூல​மாக காணொலி முறை​யிலும் சமரச தீர்வு மைய வழக்​கு​களை விசா​ரிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள், வழக்​கறிஞர்​கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்” என்​றார். விழிப்​புணர்வு பேரணி​யில் நீதிப​தி​கள், வழக்​கறிஞர்​கள்​, நீதித்​துறை பணி​யாளர்​கள்​ பங்​கேற்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in