திமுக கூட்டணி சுக்கு நூறாக உடையும்: எல்.முருகன் கருத்து

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் வளாகத்தில் நேற்று நடைபெற்ற 16-வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியிடங்களுக்கான 249 நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. நியமன கடிதங்களை பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் வளாகத்தில் நேற்று நடைபெற்ற 16-வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியிடங்களுக்கான 249 நபர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. நியமன கடிதங்களை பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள்.
Updated on
1 min read

சென்னை: ‘​தி​முக கூட்​டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

சென்னை பெரம்​பூர் ஐ.சி.எஃப் வளாகத்​தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம் மத்​திய அரசு பணி​களுக்​கான நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு ரயில்​வே, நிதி, அஞ்​சல் மற்​றும் வரு​வாய்த் துறை​களில் பணி​யாற்ற 249 நபர்​களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்​கி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஒரே ஆண்​டில் மத்​திய அரசின் பல்​வேறு துறை​களில் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. தொடர்ச்​சி​யாக, வேலை​வாய்ப்பு முகாம்​கள் நடத்​தப்​படு​கின்​றன. இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பை உரு​வாக்​கும் திட்​டங்​களை பிரதமர் மோடி தொடர்ந்து செயல்​படுத்தி வரு​கிறார்.

அதி​முக - பாஜக கூட்​டணி மற்​றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித் ஷா என்ன சொல்​கிறாரோ அது​தான் முடிவு. அவர் எங்​கள் தேசிய தலை​வர். அவர் சொல்​வதே வேத​வாக்​கு. திரு​மாவளவன் தின​மும் அரசை விமர்​சனம் செய்​கிறார். அவர் கூட்​ட​ணியை விட்டு எப்​போது வெளி​யேறலாம் என்ற சூழலில் இருக்​கிறார். வைகோ​வும் கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறக் கூடிய நிலை​யில் இருக்​கிறார். கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் வெளி​யேறும் சூழலில் உள்​ளன. எனவே, திமுக கூட்​ட​ணியே சுக்கு நூறாக உடையப் போகிறது. அதே நேரம் எங்​கள் கூட்​டணி மிக வலிமை​யாக இருக்​கிறது.

இறை நம்​பிக்கை இல்​லாத அரசு, கோயில்​களை விட்டு வெளியே வர வேண்​டும். கோயில் நிதி அறம் சார்ந்து பயன்​படுத்​தப்பட வேண்​டும். அரசு நிதி இல்​லை​யா, கோயில் நிதியி​லிருந்து பள்​ளி, கல்​லூரி​களை கட்​டும் நிலைக்கு திமுக அரசு இருக்​கிற​தா? அஜித்​கு​மார் மரணம், திருத்​தணி அரு​கில் புகார் கொடுக்க சென்ற கர்ப்​பிணி மீது தாக்​குதல், திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மரணம் ஆகியவை காவல் துறை​யின் தோல்​வியை​யும், காவல்​துறையை தன் வசம் வைத்​திருக்​கும் முதல்​வரின் தோல்​வியை​யும் காட்​டு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in