Published : 20 Jul 2018 08:25 AM
Last Updated : 20 Jul 2018 08:25 AM

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாகி சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே வங்கக்கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x