Published : 06 Jul 2025 01:03 AM
Last Updated : 06 Jul 2025 01:03 AM

பேரவை தேர்தலில் 200 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை நம்பிக்கை

நாகர்கோவில்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் என காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார்.

நாகர்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஆயத்​தக் கூட்​டம், கிராம கமிட்​டி​யினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்​கும் நிகழ்ச்​சி​யில் நான் பங்​கேற்​றேன். வரும் தேர்​தலில் கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று எம்​.பி.எம்​எல்​ஏக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஆனால், கூட்​டணி குறித்​தும், எந்த தொகு​தி​களைக் கேட்க வேண்​டும், எவ்​வளவு தொகு​தி​கள் கேட்க வேண்​டும் போன்​றவை குறித்​தும் கட்​சி​யின் அகில இந்​திய தலை​மை​தான் முடிவு செய்​யும். எனினும், வரும் தேர்​தலில் 200 இடங்​களுக்கு மேல் இண்​டியா கூட்​டணி வெற்​றி​பெறும்.தவெக தலை​வர் விஜய், மதவாத சக்​தி​களிடம் மாட்​டிக் கொள்​ளக் கூடாது. பாஜக மதவாதக் கட்​சி. காங்​கிரஸ் கட்சி எல்​லோருக்​கு​மான கட்​சி, ஜனநாயகத்தை விரும்​பும் கட்​சி. தேர்​தலை மட்​டும் குறிக்​கோளாக கொண்டு காங்​கிரஸ் செயல்​படு​வ​தில்​லை. மக்​கள் நலனைக் கருத்​தில் கொண்டே செயல்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது ராபர்ட் புரூஸ் எம்​.பி.ரூபி மனோகரன் எம்​எல்ஏ உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x