Published : 05 Jul 2025 01:12 AM
Last Updated : 05 Jul 2025 01:12 AM

காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்​டுக்​கான ‘தகை​சால் தமிழர்’ விருதுக்​கு, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். சுதந்​திர தின விழா​வில் அவருக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டு சான்​றிதழை முதல்​வர் ஸ்டா​லின் வழங்க உள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கும், தமிழ் இனத்​தின் வளர்ச்​சிக்​கும் பெரும் பங்​காற்​றிய​வர்​களை பெரு​மைப்​படுத்​தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகை​சால் தமிழர்’ என்ற விருது வழங்​கப்​படு​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் சங்​கரய்​யா, நல்​ல​கண்​ணு, கி.வீரமணி, குமரி அனந்​தன் ஆகியோ​ருக்கு இந்த விருது வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த ஆண்டு விரு​தாளரை தேர்வு செய்​வதற்​காக அமைக்​கப்​பட்ட குழு​வின் ஆலோ​சனை கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் அன்​புக்​குரிய மூத்த அரசி​யல் தலை​வரும், ‘மணிச்​சுடர்’ இதழின் ஆசிரியரும், சமூக நல்​லிணக்​கத்​துக்​காக வாழ்​நாளெல்​லாம் உழைத்து வருபவரு​மான கே.எம்​.​காதர் மொய்​தீனுக்கு விருதை வழங்க இக்​கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

காதர் மொய்​தீன், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் ஆவார். கட்​சி​யின் தமிழ் மாநில தலை​வர், தேசிய பொதுச் செய​லா​ள​ராக​வும் இருந்​தவர். அறி​வார்ந்த சொற்​பொழி​வாளர், மனிதநே​யம், மதநல்​லிணக்​கத்​துக்கு தன்னை அர்ப்​பணித்​துக் கொண்​ட​வர். கோவை​யில் கடந்த 2010-ல் நடந்த உலக தமிழ் செம்​மொழி மாநாட்​டில் தமிழகத்​துக்​கும், அரபகத்​துக்​கும் உள்ள தொடர்​பு​கள் பற்​றிய ஆய்வு கட்​டுரை வழங்​கிய​வர். ‘தா​ருல் குர்​ஆன்’ இதழில்'தமிழர்க்கு இஸ்​லாம் வந்த மதமா? சொந்​த​மா?' எனும் தலைப்​பில் 8 ஆண்​டு​கள் தொடர் கட்​டுரை எழு​தி​ய​வர். ‘வாழும் நெறி’, ‘குர்​ஆனின் குரல்’, ‘இசுலாமிய இறைக் கோட்​பாடு’ என்​பது உட்பட 6 நூல்​களை எழு​தி​ய​வர்.

வரலாற்று துறை பேராசிரிய​ர்: திருச்சி ஜமால் முகமது கல்​லூரி​யில் 15 ஆண்​டு​கள் வரலாற்று துறை பேராசிரிய​ராக பணி​யாற்​றிய​வர். காயிதே மில்​லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்​லிணக்​கம் பரப்பி வரும் சிந்​தனை​யாளர். பல நூறு பட்​ட​தா​ரி​களை உரு​வாக்கி அவர்​களது வாழ்வை உயர்த்​திய ஆசானும் ஆவார்.

‘தகை​சால் தமிழர்’ விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள பேராசிரியர் காதர் மொய்​தீனுக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டு சான்​றிதழ் ஆகிய​வற்றை ஆகஸ்ட் 15-ம் தேதி நடை​பெறும் சுதந்​திர தின விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் வழங்கி கவுரவிக்​கிறார்​.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x