Published : 04 Jul 2025 01:16 AM
Last Updated : 04 Jul 2025 01:16 AM

“மிரட்டி பணம் பறிப்​பது தான் அவரது வேலை” - நிகிதா மீது பார்​வர்டு பிளாக் தலை​வர் திரு​மாறன்ஜி புகார்

திருப்​புவனம்: என்னை திரு​மணம் செய்​து​விட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடி​விட்​டார் என்று தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன்ஜி கூறி​னார். மடப்​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:

எனக்கு 21 ஆண்​டு​களுக்கு முன்பே நிகிதா குடும்​பத்தை தெரி​யும். அவர் என்னை திரு​மணம் செய்​து​விட்டு ஒரே நாளில் ஓடி​விட்​டார். பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே எங்கோ சென்று விட்டார். என்னை மட்டுமல்ல, 3-க்கு மேற்​பட்ட திரு​மணங்​கள் செய்து ஏமாற்​றி​யுள்​ளார் நிகிதா.

பணம் பறிப்பதே வேலை... திரு​மணம் செய்​து​விட்டு ஒரே நாளில் ஓடிப்​போய் விடு​வார்.பின்​னர், திரு​மணம் செய்​தவர்​கள் மீது வரதட்​சணை புகார் கொடுத்​து, அந்த குடும்​பத்தை சித்​திர​வதைக்கு உள்​ளாக்​கு​வார். மிரட்டி பணம் பறிப்​பது தான் அவரது வேலை. திருமண மோசடி மட்​டுமின்​றி, பல்​வேறு மோசடிகளை செய்​துள்​ளனர்.

கோயில் காவலாளி விவ​காரத்​தில், புகார் கொடுத்​தவர் குறித்து போலீ​ஸார் விசா​ரித்​திருக்க வேண்​டும். நகை திருடு​போனது பொய்​யான குற்​றச்​சாட்டு. கார் நிறுத்​து​வ​தில் ஏற்​பட்ட தகராறில், தனது ஆளு​மையை நிலை​நாட்ட புகார் கொடுத்​துள்​ளார்.

எனவே, கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்​டும். மேலும், நிகிதா குடும்​பத்தை முதல் குற்​ற​வாளி​யாக சேர்க்க வேண்​டும். நிகிதா தந்தை கோட்​டாட்​சி​ய​ராக இருந்​தவர். அவரது அம்மா அரசு ஊழியர். அவர்​களுக்கு 20 ஆண்​டு​களுக்கு முன்​பே, திருமண மோசடி​யில் 2 எஸ்​.பி.கள், ஒரு டிஎஸ்பி உதவி செய்​தனர். அதே​போல, தற்​போதும் அதி​காரத்​தில் இருக்​கிறவர்​கள் அவர்​களுக்கு உதவி செய்​திருக்​கலாம்​. இவ்​வாறு திரு​மாறன்ஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x