Published : 04 Jul 2025 01:12 AM
Last Updated : 04 Jul 2025 01:12 AM

தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை: திமுக நிர்வாகிகள் ‘டார்ச்சர்’ செய்ததாக ஆடியோ வெளியீடு

செல்வானந்தம் (அடுத்த படம்) கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட செல்வானந்தத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். படம்: ஜெ.மனோகரன்

தாராபுரம்: ​திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அருகே அதி​முக நிர்​வாகி தற்​கொலை செய்து கொண்ட விவ​காரத்​தில், திமுக​வினர் தொடர்ந்து தன்னை டார்ச்​சர் செய்​த​தாக ஆடியோ வெளி​யிட்​டுள்​ளார். சம்​பந்​தப்​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அடுத்த குண்​டடம் பெல்​லம்​பட்​டியைச் சேர்ந்​தவர் செல்​வானந்​தம் (27). மக்​காச்​சோள வியா​பாரி. குண்​டடம் மேற்கு ஒன்​றிய அதி​முக தகவல் தொழில்​நுட்​பப் பிரிவு செய​லா​ள​ராகப் பொறுப்பு வகித்​தார். இவரது மனைவி முத்​துபிரியா (27) நவநாரி ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வர். இவர்​களுக்கு ஒரு மகன் உள்​ளார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநியைச் சேர்ந்த ஒரு நிறு​வனத்​திடம் மக்​காச்​சோளம் வாங்கி விற்று வந்​துள்​ளார் செல்​வானந்​தம். கொடுக்​கல், வாங்​கல் தொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்​கும், இவருக்​கும் இடையே பிரச்​சினை இருந்​துள்​ளது. இந்​நிலை​யில், செல்​வானந்​தம் புதன்​கிழமையன்று விஷ மாத்​திரைகளை விழுங்​கி​விட்​டார். கோவை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

பின்​னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்​காக கோவை அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.தற்​கொலை செய்து கொள்​வதற்கு முன்பு அவர் பேசிய ஆடியோ தற்​போது வெளி​யாகி​யுள்​ளது. அதில், “மக்​காச்​சோளம் வாங்​கிய வகை​யில் எனக்​கும், அந்​நிறு​வனத்​துக்​கும் இடையே கொடுக்​கல் வாங்​கல் இருந்​தது. அந்த நிறு​வனத்​துக்கு ஆதர​வாக பணத்​தைக் கேட்டு திமுக பிர​முகர்​கள் 3 பேர் என்னை மிரட்​டினர். வட்​டிக்கு வாங்கி ரூ.10 லட்​சம் கொடுத்​தேன். மீண்​டும் ரூ.5 லட்​சம் கொடுத்​தேன். அதற்​குப் பிறகும் அவர்​கள் என்னை தொடர்ந்து டார்ச்​சர் செய்து அசிங்​கப்​படுத்​துகிறார்​கள். மன உளைச்​சலால் உயிரை விடும் நிலைக்கு வந்​து​விட்​டேன். என் மரணத்​துக்​குப் பின்​னர், என் குடும்​பத்​தினரை தொந்​தரவு செய்​யாதீர்​கள்” என்று அழுத​வாறு தெரி​வித்​துள்​ளார்.

உறவினர்கள் போராட்டம்: இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்​ட​வர்​களை உடனடி​யாக கைது செய்ய வலி​யுறுத்​தி​யும், செல்​வானந்​தம் உடலை வாங்க மறுத்​தும் கோவை அரசு மருத்​து​வ​மனை பிணவறை முன் அவரது உறவினர்​கள் போராட்​டத்​தி்ல் ஈடு​பட்​டனர். இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x