Published : 04 Jul 2025 01:03 AM
Last Updated : 04 Jul 2025 01:03 AM

மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்

மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று பலரும் புகார் அளித்​தனர்.

கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள கல்​லூரி​யில் பேராசிரியை​யாகப் பணிபுரி​கிறார். நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள், தாயார் சிவ​காமி அம்​மாள், சகோ​தரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதே​வி, உறவினர் பகத்​சிங் ஆகியோர் அரசு வேலை வாங்​கித்தரு​வ​தாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்​திருப்​ப​தாக ஏற்​கெனவே பல வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

2010-ல் நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள் துணை ஆட்​சி​ய​ராகப் பணி​யாற்​றிய​போது, அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி ரூ.16 லட்​சம் மோசடி செய்​த​தாக, நிகிதா குடும்​பத்​தினர் மீது வழக்கு உள்​ளது. மதுரை செக்​கானூரணி​யைச் சேர்ந்த செல்​வத்​திடம் ரூ.25 லட்​சம், ஆலம்​பட்​டியைச் சேர்ந்த முத்​துக்​கொடி, முரு​கேசன் ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்​சம் பெற்று மோசடி செய்​த​தாக​வும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

மேலும், மொக்​க​மாயன், மணிமேகலை ஆகியோரிட​மும் பணம் பெற்​று, நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மோசடி செய்​த​தாக புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆலம்​பட்​டி​யில் உள்ள ஜெயபெரு​மாளுக்கு சொந்​த​மான வீட்டை தனி​யார் கல்​லூரிமேலா​ளர் பாசில் மன்​சிங் என்​பவரிடம் விற்​ற​தி​லும் புகார் உள்​ளது. நிகிதா குடும்​பத்​தின​ரால் பாதிக்​கப்​பட்ட பாசில் மன்​சிங், முத்​துக்​கொடி, முரு​கேசன், தெய்​வம், வினோத்​கு​மார் உள்​ளிட்​டோர் திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று மீண்​டும் புகார் மனு அளித்​தனர்.

கல்​லூரிக்கு வரவில்​லை.. திண்​டுக்​கல்​லில் உள்ள எம்​விஎம் அரசு மகளிர் கல்​லூரி​யில் தாவர​வியல் துறைத் தலை​வ​ராக பணிபுரிந்து வரும் நிகி​தா, மாணவி​கள், உடன் பணிபுரி​யும் பேராசிரியைகள், அலு​வலர்​கள் ஆகியோ​ருக்கு தொடர்ந்து இடையூறு தரும் வகை​யில், உயர் அதி​காரி​களுக்கு புகார் அளித்து வந்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அவர் தாவர​வியல் துறை துணைத் தலை​வ​ராக இருந்​த​போது கல்​லூரி மாணவி​கள் சிலர், ‘எங்​களை மனரீ​தி​யாகத் துன்​புறுத்​துகிறார். தகாத வார்த்​தைகளால் பேசுகிறார், எனவே, நிகி​தாவை பணி​யிட மாற்​றம் செய்ய வேண்​டும்’ என 2024 மே மாதம் திண்​டுக்​கல் மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்த பூங்​கொடி​யிடம் புகார் மனு அளித்​துள்​ளனர்.

ஆனால், அந்த புகார் தொடர்​பாக எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அஜித்​கு​மார் மரணத்​துக்கு பிறகு கடந்த 5 நாட்​களாக நிகிதா பணிக்குவரவில்லை என்று கல்​லூரி வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x