Published : 04 Jul 2025 12:59 AM
Last Updated : 04 Jul 2025 12:59 AM

கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

சக்தீஸ்வரன் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள்.

சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்​குமாரை போலீ​ஸார் தாக்​கியதை வீடியோ எடுத்​தவருக்கு ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் காவலா​ளி​யாகப் பணிபுரிந்த அஜித்​கு​மார் (29), நகை திருட்டு புகாரின்​பேரில் தனிப்​படை போலீ​ஸாரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது உயி​ரிழந்​தார். கோயில் பின்​புற​முள்ள மாட்​டுத் தொழு​வத்​தில் அஜித்​கு​மாரை, தனிப்​படை போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கு​வதை கோயில் பணி​யாளர் சக்​தீஸ்​வரன், கழி​வறை​யில் மறைந்​திருந்து வீடியோ எடுத்​தார். இதனால் அவர் இவ்​வழக்​கில் நேரடி சாட்​சி​யாக உள்​ளார்.

இந்​நிலை​யில், தனக்கு ஆயுதமேந்​திய போலீஸ் பாது​காப்பு கேட்டு இ-மெயி​லில் டிஜிபிக்கு சக்​தீஸ்​வரன் கடிதம் அனுப்​பி​னார். இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நான்​தான் அஜித்​கு​மாரை பிடித்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​த​தாக, கைதாகி​யுள்ள தலை​மைக் காவலர் ராஜாவுடன் தொடர்​பில் உள்​ளவர்​கள் தவறான தகவலைப் பரப்​பு​கின்​றனர். நான் துணிந்​து​தான் சாட்சி சொல்ல முடி​வெடுத்​தேன். எனக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால், மற்​றவர்​கள் சாட்சி சொல்ல பயப்​படு​கின்​றனர். எனது உயிர் போனால்​கூட பரவா​யில்​லை. மற்ற சாட்​சிகளைப் பாது​காக்க வேண்​டும். குற்​றம் செய்​தவர்​கள் மீது​ நடவடிக்கை எடுக்​கு​மாறு மட்​டுமே நான் சொன்​னேன். அரசையோ, மற்​றவர்​களையோ குறை கூற​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போலீ​ஸார் தாக்கி அஜித்​கு​மார் இறந்த வழக்​கில், ஜூன் 1-ம் தேதி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் சாட்சி அளித்​துள்​ளேன். அஜித்​கு​மார் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்ட தலை​மைக் காவலர் ராஜா என்​பவர், பல்​வேறு குற்​றப் பின்​னணி உடைய ரவுடிகளு​டன் தொடர்​பில் இருந்​துள்​ளார். ஜூன் 28-ம் தேதி காலை​யில் தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது நான் காவலர் ராஜாவை நேரில் சந்​தித்​தேன். அப்​போதே என்னை கடுமை​யாக மிரட்​டி​னார். எனக்​கும், என்​னைச் சார்ந்​தோருக்​கும் அச்​சுறுத்​தல் உள்​ளது.

எனவே, எனக்​கும், மற்​றவர்​களுக்​கும் ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும். அது​வும் பிற மாவட்​டத்​தைச் சேர்ந்த போலீ​ஸாரை நியமிக்க வேண்​டும். இவ்​வாறு அந்த கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது. மேலும் இந்த கடித நகலை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு பதி​வாள​ருக்​கும், தென் மண்டல ஐ.ஜி.க்​கும் அனுப்​பி​யுள்​ளார்.

இதையடுத்​து, தென்​மண்டல ஐ.ஜி. பிரேம்​ஆனந்த் சின்ஹா உத்​தர​வின் பேரில், சக்​தீஸ்​கு​மாருக்கு ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது. மேலும், அவரது வீடு, அலு​வல​கத்​தி​லும் தலா 2 காவலர்​கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட உள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x