Published : 03 Jul 2025 06:13 AM
Last Updated : 03 Jul 2025 06:13 AM

தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் காகித வடிவிலேயே உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் செல்​வம் விடுத்துள்ள அறிக்​கை: திமுக ஆட்​சி​யமைத்​தது முதல் தாக்​கல் செய்த நிதி​நிலை அறிக்​கை​களில், 8,500 பேருந்​துகள் புதி​தாக வாங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், அறி​விப்​பில் கால் பகுதி பேருந்​துகள்​கூட வாங்​கப்​பட​வில்லை என்​பதுதான் நிதர்​சன​மான உண்​மை.

குறிப்​பாக, சென்​னை, மேற்கு தாம்​பரத்​திலிருந்து மண்​ணி​வாக்​கம், முடிச்​சூர், வண்​டலூர் போன்ற பகு​தி​களுக்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரையி​லான ஒரு மணி நேரத்​தில் 12 பேருந்​துகள் இயக்​கப்பட வேண்​டும். ஆனால், வெறும் மூன்று பேருந்​துகள் மட்​டுமே இயக்​கப்​படு​வ​தாக கள நில​வரம் தெரிவிக்​கிறது.

இதன் காரண​மாக, ஒவ்​வொரு நாளும் கூடு​தலாக ரூ.40 முதல் ரூ.50 செல​விட வேண்​டிய கட்​டா​யத்​துக்கு ஏழை எளிய மக்​கள் ஆளாக்​கப்​பட்​டுள்​ளனர். ஒரு பானை சோற்​றுக்கு ஒரு சோறு பதம் என்​ப​தற்​கேற்ப தமிழகம் முழு​வதும் இதே நிலை​மை​தான். இதிலிருந்​து, மக்​களின் தேவைக்​கேற்ப பேருந்​துகள் இயக்​கப்​படு​வ​தில்லை என்​பது தெளி​வாகிறது. தமிழகத்​தில் பேருந்​துகள் இயங்​கும் எண்​ணிக்கை என்​பது காகிதவடி​வில்​தான் இருக்​கிறது என்​பதை களயதார்த்​தம் சுட்​டிக்​காட்​டு​கிறது.

எனவே, முதல்​வர் கடந்த 4 ஆண்​டு​களில் கொள்​முதல் செய்​யப்​பட்ட புதிய பேருந்​துகள் குறித்த புள்ளி விவரங்​களை தெரிவிக்க வேண்​டும். தேவைக்​கேற்ப புதிய பேருந்​துகளை வாங்​க​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்​ என்று அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x