Published : 02 Jul 2025 05:23 AM
Last Updated : 02 Jul 2025 05:23 AM

மருத்துவர் தினத்தையொட்டி 50 மருத்துவர்களுக்கு விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற ‘மருத்​து​வர் தினம் 2025’ நிகழ்​வில் பங்​கேற்ற சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் மருத்​து​வத் துறை​யில் மகத்​தான பணி​யாற்​றிய 50 மருத்​து​வர்​களை பாராட்டி பதக்​கங்​கள் மற்​றும் சான்​றிதழ்​களை வழங்கி கவுர​வித்​தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் எழிலன் நாக​நாதன், சுகா​தா​ரத் துறை செய​லா​ளர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண்​தம்​பு​ராஜ், இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஓமியோபதி துறை ஆணை​யர் எம்​.​விஜயலட்​சுமி, மருத்து​வப் பணி​யாளர் தேர்​வாணை​யம் தலை​வர் பி.உமா மகேஸ்​வரி, பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த்​தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் செல்​வ​வி​நாயகம், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் ராஜமூர்த்​தி, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி கூடு​தல் இயக்​குநர் தேரணி​ராஜன் உள்​ளிட்​டோர் நிகழ்​வில் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்​வில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பேசி​ய​தாவது: 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்​கப்​பட்ட ‘மக்​களைத் தேடி மருத்​து​வம்’ திட்​டத்​தில் இது​வரை 2 கோடியே 28 லட்​சம் பேர் பயனடைந்​துள்​ளனர். இத்​திட்​டத்​துக்​காக ஐநா​வால் தமிழக சுகா​தா​ரத் துறைக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல், 2024-ம் ஆண்டு டிசம்​பரில் தொடங்​கப்​பட்ட ‘இன்​னு​யிர் காப்​போம் நம்​மைக்​காக்​கும் 48’ திட்​டம் சாலை​யில் விபத்துக்குள்​ளானவர்​களுக்கு முதல் 48 மணி நேரத்​தில் ரூ.1 லட்​சம் உதவித் தொகை தந்து உயிர்​களைக் காப்​பாற்​றுகின்ற சிறந்த திட்​டமாகும்.

இத்​திட்​டத்​தில் உதவித் தொகை கடந்த சில மாதங்​களுக்கு முன்பு ரூ.2 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. இத்​திட்​டத்​தின் மூலம் உயிர் பெற்று இருப்​பவர்​கள் எண்​ணிக்கை 4 லட்​சத்தை நெருங்​கிக் கொண்​டிருக்​கிறது. இது​போல பல்​வேறு சிறப்​புக்​குரிய திட்​டங்​கள் தமிழக சுகா​தா​ரத் துறை​யால் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தி​யா​வில் மருத்​து​வத்​துக்​காக உலக அளவிலிருந்து வருபவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. தமிழகத்​துக்கு வரும் சுற்​றுலாப் பயணி​கள் 25 சதவீதம் பேர் மருத்​து​வத்​துக்​காக வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் 19 புதிய மாவட்​டங்​களில் உள்ள தலைமை மருத்​து​வ​மனை​கள், 6 மாவட்​டங்​களில் புதிய மருத்​து​வ​மனை​கள் என மொத்​தம் 25 இடங்​களில் சுமார் ரூ.1,018 கோடி செல​வில் நடை​பெற்று வரும் கட்​டமைப்பு பணி​கள் விரை​வில் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும். 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​களை ஜூலை 3-ம் தேதி முதல்​வர் திறந்து வைக்​க​வுள்​ளார். அன்​றைய தினமே 50 ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை​யும் முதல்​வர்​ திறக்கவுள்​ளார்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x