Published : 02 Jul 2025 05:40 AM
Last Updated : 02 Jul 2025 05:40 AM

திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, பாஜக சார்பில் சென்னை சிவானந்தா சாலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். (கடைசி படம்) சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை விமர்​சித்த திமுக எம்​.பி. ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற பாஜக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மகா​ராஷ்டி​ரா, டெல்​லியைப்போன்​று, தமிழகத்​தி​லும் ஆட்​சி​யமைப்​போம் என தெரி​வித்​திருந்​தார். இதை கடுமை​யான சொற்​களால் திமுக எம்​.பி. ஆ.ராசா விமர்​சித்​திருந்​தார்.

அதற்கு பாஜக​வினர் கடும் கண்​டனத்தை தெரி​வித்​ததோடு, ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​திருந்​தார்.

அதே​நேரம், ஆர்ப்​பாட்​டத்​துக்கு காவல்​துறை அனு​ம​திக்​க​வில்​லை. இந்​நிலை​யில், சென்னை தண்​டை​யார்​பேட்​டை, கொளத்​தூர், அம்​பத்​தூர், அயனாவரம், சிவானந்தா சாலை, பனகல் மாளி​கை, திரு​வள்​ளுவர் நகர் ஆகிய இடங்​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வதற்​காக நேற்று மாலை பாஜக​வினர் திரளத் தொடங்​கினர்.

அப்​போது, கரு.​நாக​ராஜன், நாராயணன் திருப்​ப​தி, கராத்தே தியாக​ராஜன், வினோஜ் பி.செல்​வம், ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​களை காவல்​துறை​யினர் கைது செய்​தனர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்​ளு, வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் கூறும்​போது, ‘‘போ​ராடக்​கூட அனு​ம​திக்​காமல் இருந்​தால், தமிழகத்​தில் ஜனநாயக முறை​யில்​தான் ஆட்சி நடக்​கிறதா என்ற கேள்வி எழுகிறது. மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை மிக மோச​மான வார்த்​தை​யில் திமுக எம்​.பி., ஆ.ராசா பேசுவதற்கு திமுக அரசு அனு​ம​திக்​கிறது. அரசு எவ்​வளவு அடக்​கு​முறையை கட்​ட​விழ்த்​தா​லும், எங்​களது போ​ராட்​டம் தொடரும்’’ என்​றார்.

இந்து மக்​கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் வெளி​யிட்ட அறிக்​கை​யில், "ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக துணைத் தலை​வர் நாராயணன் திருப்​ப​தி, காவல்​துறை அதி​காரி​களால் கொடூர​மாக தாக்​கப்​பட்டு இருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. இந்த விஷ​யத்​தில் முதல்​வர் நேரடி​யாக தலை​யிட்டு நீதியை நிலை​நாட்​டா​விட்​டால், இந்து மக்​கள் கட்​சி​யும்​ போ​ராட்​டக்​ களத்​தில்​ ஈடு​படும்​" என்​று கூறியுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x