Published : 28 Aug 2014 10:32 AM
Last Updated : 28 Aug 2014 10:32 AM

பழம்பெரும் வசனகர்த்தா மா.ரா. காலமானார்

மா.ரா. என்று திரையுலகில் அன்புடன் அழைக்கப்பட்ட மா.ராமச் சந்திரன் (81) செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.

தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றிய இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். இவற்றில் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உடல் நிலை சரியில்லாத நிலையில் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இவருக்கு மனைவி, 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x