Published : 01 Jul 2025 04:45 AM
Last Updated : 01 Jul 2025 04:45 AM

திமுக ஆட்சியில் 24 காவல்நிலைய மரணங்கள்; வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா? - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் 24-க்​கும் மேற்​பட்ட காவல் நிலைய மரணங்​கள் நிகழ்ந்​துள்​ளன. இதை வேடிக்கை பார்ப்​பது தான் முதல்​வரின் வேலையா என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து தனது எக்​ஸ்தள பதி​வில் நயி​னார் நாகேந்​திரன் கூறி​யிருப்​ப​தாவது: காவல் துறை​யால் கைது செய்​யப்​பட்ட அஜித்​கு​மார் 24 மணி நேரத்​துக்​குள் நீதிப​திக்கு முன் ஏன் ஆஜர்​படுத்​தப்​பட​வில்​லை.

பல இடங்​களில் அஜித்​கு​மாரை வைத்து அடித்து துன்​புறுத்​திய காவல்​துறை மடப்​புரம் கோயில் அலு​வல​கத்​தின் பின்​புறம் அழைத்து சென்று தாக்​கி​யுள்​ளனர். விசா​ரணை என்ற பெயரில் முறை​யாக கைது செய்​யப்​ப​டாத ஒரு​வரை போலீ​ஸார் அழைத்துச்​செல்ல அனு​மதி வழங்​கியது யார்?

விரைந்து தனிப்​படை அமைத்து அஜித்​கு​மாரை விசா​ரிக்​கும்​படி விசா​ரித்து "உண்​மை​யை" வரவழைக்க மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஆஷிஷ் ராவத் வாயி​லாக, நகையை பறி​கொடுத்​தவர்​களுக்கு நெருக்​க​மாக இருக்​கும் தலைமை செயல​கத்​தில் பணிபுரி​யும் ஒரு​வர் அழுத்​தம் கொடுத்​த​தாக கூறப்​படு​கிறதே.

இது உண்​மை​யா, உண்மை எனில், யார் அவர், அவர் மீது என்ன நடவடிக்​கை? இரும்பு கம்​பி​யால் சரமாரி​யாக அடிக்​கப்​பட்​டு, மிள​காய் பொடி கலந்த தண்​ணீரை குடிக்​கச் செய்து துன்​புறுத்​தப்​பட்ட அஜித்​கு​மார் மயங்கி விழுந்த பின் உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​ப​டா​மல், நான்கு மணி நேரம் போலீஸ் வாக​னத்​தில் பூட்டி வைக்​கப்​பட்​டது ஏன், எளிய பின்​புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்​தால் என்ன, இறந்​தால் என்ன என்ற ஏளன​மான எண்​ணமா அல்​லது உயிர் பிரிந்து விட்​டது என்று தெரிந்​து, தடயங்​களை அழிக்​க​வும், கட்​டுக்​கதைகளை புனைய​வும் காவல் துறை​யினருக்கு தேவைப்​பட்ட அவகாச​மா?

நான்கு மணி நேரம் தாமத​மாக அழைத்து வந்த காரணத்​தி​னாலும், சந்​தேகத்​துக்​குரிய நிலை​யில் மரணம் நிகழ்ந்​துள்ள காரணத்​தி​னாலும், அஜித்​கு​மாரை பரிசோ​திக்க திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை​யும், மானாமதுரை அரசு மருத்​து​வ​மனை​யும் மறுத்​து​விட்​ட​தால், மதுரை வரை சென்று ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அஜித் குமாரை சடல​மாக காவல் துறை​யினர் பரிசோதனைக்கு ஒப்​படைத்​தார்​கள் என்​பது உண்​மை​யா?

அஜித்​கு​மாரின் இறப்​புக்கு போலீஸ் துன்​புறுத்​தல் காரணம் இல்​லை​யென்​றால், 6 காவலர்​கள் ஏன் பணி​யிடை நீக்​கம் செய்​யப்பட வேண்​டும், இது கொலை​தான் என்று ஒப்​புக்​கொண்ட பின்​னும், அஜித் குமாரின் மரணத்​துக்கு காரண​மாக இருந்​தவர்​கள் மீது கொலை வழக்கை இப்​போது வரை​யில் ஏன் பதி​ய​வில்​லை, ஏன் கைது செய்​ய​வில்​லை?

இவ்​வளவு குளறு​படிகள் இருந்​தும், போராட்​டத்​தில் இறங்​கிய அஜித்​கு​மாரின் குடும்​பத்​தா​ரிடம் சடலத்தை பெற்​றுக்​கொள்​ள​வும், பிரச்​சினையை பெரி​தாக்​காமல் இருக்​க​வும் திமுக​வினரை வைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதோடு, அவர்​கள் மசி​யாமல் இருந்த நிலை​யில், காவல் துறை​யின் பாது​காப்​புடன் திமுக கொடி பொருத்தப்பட்ட வாக​னத்​தில் அஜித் குமாரின் தம்​பி​யான நவீனை மறு​படி​யும் எங்​கேயோ அழைத்​துச் செல்ல முயற்​சித்​தது அராஜக செய​லாகும்.

நீதியை தடுக்​கும் பொருட்டு செயல்​பட்ட திமுக அமைச்​சர்​கள் மற்​றும் பொறுப்​பாளர்​கள் மீது எப்​போது வழக்கு பதிவு, இது​வரை திமுக ஆட்​சி​யில் 24-க்​கும் மேற்​பட்ட காவல்​நிலைய மரணங்​கள் நிகழ்ந்​துள்ள நிலை​யில் இதை வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருப்​பது தான் முதல்​வரின் வேலை​யா, தமிழகக் காவல்​துறை முதல்​வரின்​ கட்​டுப்​பாட்​டில்​ இருக்​கிற​தா இல்​லை​யா? இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x