பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை சார்பில் சென்னை பெரியார் நகரில் நடைபெற்ற விழாவில் பத்ம விருதுபெற்ற ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணனை கவுரவித்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி. உடன், அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன், விஜயலட்சுமி வித்யாதரன், டாக்டர் வி.விஜயசந்தர் வித்யாதரன், தெய்வநாயகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை சார்பில் சென்னை பெரியார் நகரில் நடைபெற்ற விழாவில் பத்ம விருதுபெற்ற ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணனை கவுரவித்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி. உடன், அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன், விஜயலட்சுமி வித்யாதரன், டாக்டர் வி.விஜயசந்தர் வித்யாதரன், தெய்வநாயகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: ​வி​ராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை​போல நாம் அனை​வரும் பெண் கல்​வி, ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்கு உதவ வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்வி கூறி​னார். விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை சார்​பில், பத்​மஸ்ரீ விருதுபெற்ற ஸ்த​பதி தேவ.​ரா​தா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரி​யார் நகரில் நேற்று நடை​பெற்​றது. அறக்​கட்​டளை நிறு​வனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.​வித்​யாதரன் தலைமை வகித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்​வி,ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணனை கவுர​வித்​தார். தொடர்ந்​து, அறக்​கட்​டளை சார்​பில் ஏராள​மான பெண் பயனாளி​களுக்கு கல்​வி, மருத்​துவ உதவித்​தொகை, கண் கண்​ணாடி, தையல் இயந்​திரங்​களை வழங்​கி​னார்.

பின்​னர் நீதிபதி பேசி​ய​தாவது:விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை, பெண் குழந்​தைகள் கல்விக்​காக​வும், ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​காக​வும் ஆண்​டு​தோறும் ஏராள​மான உதவி​களை செய்து வரு​கிறது. இந்த அறக்​கட்​டளை​போல நாமும் ஏழை பெண்​களின் கல்​வி, வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​காக முடிந்த உதவி​களை செய்ய வேண்​டும். ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணன் வடிவ​மைத்த சிற்​பம் ஜி-20 மாநாட்​டுக்கே பெரு​மையை தேடித்​தந்​தது. அதனாலேயே பத்​மஸ்ரீ விருதும் அவரை தேடிவந்​தது. நமது பண்​பாட்​டை​யும், கலாச்​சா​ரத்​தை​யும் நாம் போற்​றிப் பாது​ காக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஜி-20 மாநாட்டில் சிலை: ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணன் பேசும்​போது, “ஜி-20 மாநாட்​டில் 40 அடி உயரத்​தில் சிலை வைக்க வேண்​டும். அதை பாரம்​பரிய ஸ்த​பதி ஒரு​வர்​தான் செய்ய வேண்​டும் என்று பிரதமர் மோடி விரும்​பி​னார். நான் சிற்ப சாஸ்​திர முறைப்​படி, பாரதம், பாரதப் பிரதமர் என்ற சொற்​களு​டன், 27 அடி உயர நடராஜர் சிலையை அமைக்​கப் பரிந்​துரைத்​தேன்.

அதை பிரதமர் ஏற்​றுக்​ கொண்​டார். அவர், கலைஞர்​களின் தொழில் உரிமை​யை, பாரம்​பரிய நடை​முறை​களை மதிப்​பவர்” என்​றார். அறக்​கட்​டளை நிறு​வனர் கே.பி.​வித்​யாதரன் பேசும்​போது, “முன்பு நல்ல நாள் பார்த்​து, தோப்​புக்​குச் சென்​று, ஆண் மரமா, பெண் மரமா என்று தேர்வு செய்​து, வீடு​களுக்கு மரங்​களை அறுப்​பார்​கள். அதனால்​தான் அந்​தக் காலத்து வீடு​களும், கோயில் கதவு​களும் நீண்​ட​காலம் உறு​தி​யாக இருந்​தன.

அந்த வீடு​களில் வசிப்​போரும் பல தலை​முறை​கள் சிறப்​பாக வாழ்ந்​தனர். இன்று பட்​டறை​யில் கிடைத்த மரங்​களை​யும், ரெடிமேடு கதவு​களை​யும் பயன்​படுத்​துகின்​றனர். திரு​மணத்​துக்கு தாலியை ரெடிமே​டாக வாங்கி அணிந்து கொள்​கின்​றனர். அந்​தக் காலத்​தில் நல்ல நாள், நேரம் பார்த்​து, தங்​கத்தை உருக்கி தாலி செய்​த​தால், அதை வாங்​கு​வோரின் குடும்ப வாழ்க்கை சிறப்​பாக இருந்​தது. எனவே, நமது பாரம்​பரிய மரபு​களை அனை​வரும் கடைபிடிக்க வேண்​டும்” என்​றார். இந்த நிகழ்ச்​சி​யில் தெய்​வ​நாயகி ரா​தாகிருஷ்ணன், விஜய லட்​சுமி வித்​யாதரன், டாக்​டர் வி.விஜயசந்​தர் வித்​யாதரன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்டனர்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in