Published : 30 Jun 2025 05:45 AM
Last Updated : 30 Jun 2025 05:45 AM

பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்

சென்னை: பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்க கையகப்​படுத்​தப்​பட​வுள்ள நிலங்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.35 லட்​சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்​ண​யம் செய்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் பசுமை விமான நிலை​யம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக, பரந்​தூர் உள்​ளிட்ட சுற்​றி​யுள்ள 13 கிராமங்​களில் 5,746 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை அரசு மேற்​கொண்டு வரு​கிறது. விமான நிலை​யம் அமைக்க ஏகனாபுரம் உள்​ளிட்ட சில கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டம் நடத்தி வருகின்றனர்.

கையகப்​படுத்​தப்​படும் நிலங்​களுக்கு வழி​காட்டி மதிப்​பை​விட கூடு​தல் தொகை வழங்க முன்வந்த அரசு, குழுவை அமைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இந்​நிலை​யில், தொழில் நிறு​வனம் மற்​றும் முதலீட்டு துறை செயலர் அருண் ராய், நிலங்​களுக்​கான விலை நிர்ணய அரசாணையை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது:பரந்​துரில் பசுமை விமான நிலை​யம் அமைக்​கும் திட்​டத்​துக்​காக 3,774.01 ஏக்​கர் தனி​யார் பட்டா நிலங்களும், 1,972.17 ஏக்​கர் அரசு நிலங்​களும் கையகப்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டது. தனி​யார் நிலங்​களுக்​கான விலையை நிர்​ண​யம் செய்​வது தொடர்​பாக அமைக்​கப்​பட்ட குழு பேச்​சு​வார்த்தை நடத்​தி, பரிந்​துரையை அரசுக்கு அனுப்​பியது.

அதன்​படி, வழி​காட்டி மதிப்பு ரூ.5 லட்​சம் முதல் ரூ.17 லட்​சம் வரை உள்ள நிலங்​களுக்கு இழப்​பீடு மற்​றும் ஊக்க தொகை​யுடன் சேர்த்து ஏக்​கருக்கு ரூ.35 லட்​சம் முதல் ரூ.60 லட்​சம் வரை விலை நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. சதுப்பு நிலங்​களும், வறண்ட நிலங்​களும் வகைப்​படுத்​தப்​பட்டு விலை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பிட்ட 374.53 ஏக்​கர் நிலத்​துக்கு மட்​டும் குறைந்​த​பட்ச தொகை ஏக்​கருக்கு ரூ.40 லட்​சத்​தில் இருந்து ரூ.60 லட்​சம் வரை நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

வழி​காட்டி மதிப்பு ரூ.17 லட்​சத்​துக்​கும் அதி​க​மாக உள்ள 996 ஏக்​கர் பரப்பு நிலங்​களுக்கு ரூ.2.51 கோடி வரை ஏக்​கருக்கு விலை நிர்ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதி​காரி​கள் நிலங்​களை கையகப்​படுத்​தும் பணி​களை மேற்​கொள்ள வேண்​டும். இதை ஏற்​றுக் கொள்ளாதவர்​களின் நிலங்​களை உரிய துறை​களின் மூல​மாக மதிப்​பீடு செய்​து, அவர்​களுக்​கும் 100 சதவீதம் இழப்​பீடு மற்​றும் 25 சதவீத ஊக்​கத்​தொகை கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x