Published : 18 Jun 2025 06:19 AM
Last Updated : 18 Jun 2025 06:19 AM

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்

வேலூர்: மாணவர்​கள் நடத்​திய இந்தி எதிர்ப்பு போராட்​டத்​துக்கு திமுக ஸ்டிக்​கர் ஒட்​டிக்​கொண்​டது என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

வேலூரில் நேற்று நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் பங்​கேற்ற கட்​சித் தலை​வர் அன்​புமணி பேசி​ய​தாவது: பல்​வேறு துறை​களி​லும் தமிழகம் பின்​னோக்கி சென்று கொண்​டிருக்​கிறது. மக்​கள் விரோத திமுகவை அகற்ற வேண்​டும்.

அடித்​தட்​டு, பின்​தங்​கிய மக்​களை மேம்​படுத்த எந்த திட்​ட​மும் செயல்​படுத்​தப்​பட​வில்​லை. மேலும், சமூக நீதியை நடை​முறைபடுத்​த​வும் திமுக தவறி​விட்​டது. கிராமங்​களில் பாமக உறுப்​பினர் சேர்க்​கையை தீவிரப்​படுத்த வேண்​டும். ஜூலை 25-ல் ராம​தாஸ் பிறந்த நாளில் தமிழக மக்​களின் உரிமை​களை மீட்​டெடுக்க நடைபயணம் மேற்​கொள்ள உள்​ளேன்.

தமிழகத்​தில் ரூ.10 லட்​சம் கோடிக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக கூறுகிறார்கள். ஆனால், எவ்​வளவு முதலீடு வந்​துள்​ளது என்று கேட்​டால், அதற்கு பதில் அளிப்​ப​தில்​லை.

தமிழகத்​தில் மாணவர்​கள் நடத்​திய இந்தி எதிர்ப்​புப் போராட்​டத்​துக்​கு, திமுக ஸ்டிக்​கர் ஒட்​டிக் கொண்​டது. சித்​திரை முழு நிலவு மாநாட்​டைப் பார்த்து திமுக அரண்டு போயுள்​ளது. இடஒதுக்​கீடுவழங்​காமல் ஏமாற்​றிய திமுக​வுக்​கு, வரும் தேர்​தலில் வன்னியர் சமூகத்​தினர் தக்க பாடம் புகட்ட வேண்​டும். இவ்​வாறு அன்​பு மணி பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x