கூட்டுறவு இயக்கங்களுக்கு அரசியல் கட்சியினர் தலைவராக வரக்கூடாது: சி.பி.​ராதாகிருஷ்ணன் கருத்து

கூட்டுறவு இயக்கங்களுக்கு அரசியல் கட்சியினர் தலைவராக வரக்கூடாது: சி.பி.​ராதாகிருஷ்ணன் கருத்து
Updated on
1 min read

சேலம்: சேலத்​தில் சஹகார் பாரதி அமைப்​பின் (இந்​தி​யா​வில் கூட்​டுறவு இயக்​கத்தை மேம்​படுத்​தும் அமைப்​பு) மாநில மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு அழைப்​பாளர்​களாக மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், ரிசர்வ் வங்கி இயக்​குநர் சதீஷ் கே.ம​ராத்தி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறிய​தாவது: கூட்​டுறவு இயக்​கம் மக்​கள் இயக்​க​மாக மாற வேண்​டும். கூட்​டுறவு இயக்​கங்​கள் நுகர்​வோரை பயனடையச் செய்ய வேண்​டும். அதே​நேரத்​தில், கூட்​டுறவு இயக்​கங்​களுக்கு அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் தலை​வ​ராக வரக்​கூ​டாது. அரசி​யல் கட்​சி​யின​ரால் ஊழல் அதி​மாகி​விட்​டது. தமிழகத்​தில் பல்​வேறு கூட்​டுறவு சங்​கங்​கள் தொடர் தோல்​வியை சந்​தித்து வரு​கின்​றன.

நகைக் கடன் வழங்​கு​வ​தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த கட்​டுப்​பாடு​கள் நல்​லதுக்​கு​தான். நகைக்​கடன் வாங்​குபவர்​களில் பெரிய வியா​பாரி​கள் இருந்​தார்​கள் என்​ப​தால் கட்​டுப்​பாடு கொண்டு வரப்​பட்​டது. என்​னைப் பொறுத்​தவரை, துணைவேந்​தர் நியமனம் என்​பது ஆளுநரின் அதி​காரத்​துக்கு உட்​பட்​டது. இவ்​வாறு சி.பி.​ ரா​தா கிருஷ் ணன் கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in