Published : 16 Jun 2025 05:28 AM
Last Updated : 16 Jun 2025 05:28 AM

முருக பக்தர்கள் ​மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை: ஆன்​மிக மாநாட்டை அரசி​யலுக்​குப் பயன்​படுத்​தி​னால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. மதுரை​யில் வரும் 22-ம் தேதி நடை​பெறும் முருக பக்​தர்​கள் மாநாட்​டுக்கு 52 நிபந்​தனை​களு​டன் போலீ​ஸார் அனு​மதி வழங்​கினர்.

இதில் 6 நிபந்​தனை​களை மாற்​றியமைக்க கோரி இந்து முன்​னணி சார்​பிலும், அறு​படை வீடு​கள் அமைக்​கக் கூடாது என்று மக்​கள் கலை இலக்​கியக் கழகம் மற்​றும் அர்ச்​சகர் பயிற்சி பெற்ற மாணவர்​கள் சங்​கம் சார்​பிலும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இவற்றை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார்.

அவர் தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அரசி​யலமைப்​பின்​படி ஒவ்​வொரு​வரும் தங்​கள் மதத்தை சுதந்​திர​மாகப் பின்​பற்​ற​வும், பிரச்​சா​ரம் செய்​ய​வும் உரிமை உள்​ளது. அதே​நேரத்​தில், மதவாதம் மற்​றும் நல்​லிணக்​கத்தை பாதிப்​ப​தாக இருந்​தால் கட்​டுப்​பாடு​களை விதிக்​கலாம்.

இந்த மாநாடு அரசி​யலுக்​காக நடத்​தப்​படு​கிறது என்று இடை​யீட்டு மனு​தா​ரர்​கள் சார்​பில் அச்​சம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மத அமைப்​பு​களை அரசி​யலுக்​காகப் பயன்​படுத்​தி​னால் மதத்தை தவறாகப் பயன்​படுத்​து​வதை தடுக்​கும் சட்​டத்​தின்​கீழ் நடவடிக்கை எடுக்​கலாம்.

மாநாட்​டுக்கு வரும் வாக​னத்​துக்கு பாஸ் கேட்டு விண்​ணப்​பித்​தால் 24 மணி நேரத்​தில் வழங்க வேண்​டும். இரு ட்ரோன்​கள் பறக்​க​வும் அனு​மதி வழங்​கப்​படு​கிறது. அறு​படை வீடு​களின் மாதிரி அமைக்க அறநிலை​யத் துறை, மாநக​ராட்​சி​யிடம் அனு​மதி பெறத் தேவை​யில்​லை. மாநாடு நடை​பெறும் இடத்​தில் ஏற்​கெனவே பல கட்​சிகளின் மாநாடு​கள் நடை​பெற்​றுள்​ளன. அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​ப​டா​மல் இருக்க போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட வேண்​டும்.

மத நல்லிணக்கம்... இந்த மாநாட்​டால் மத நல்​லிணக்​கம் சீர்​குலைய வாய்ப்பு இருப்​ப​தாக அரசுத் தரப்​பில் அச்​சம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்கு ஆதா​ர​மாக திருப்​பரங்​குன்​றம் ஆர்ப்​பாட்​டத்​தில் சிலரின் பேச்​சுகள் சுட்​டிக்​காட்​டப்​பட்​டுள்​ளன. எனவே, இந்த மாநாட்​டில் மத நல்​லிணக்​கம் காப்​பாற்​றப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறியுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x